சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக மிகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெறும் ஜஸ்டீஸ் மாண்புமிகு திரு.சஞ்ஜய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களது அந்தத் தலைமை நீதிபதி பொறுப்புக்கு, இடத்திற்குத் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) மாண்புமிகு ஜஸ்டீஸ் திரு. ஆர்.மகாதேவன் அவர்களை நியமனம் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.
பல வழக்குகளில் அவர்கள் ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்த நீதியளித்த வரலாறு சிறப்புக்குரியதாகும்.
நிறைந்த அனுபவமும், சட்டங்களை விளக்கும் போது அத்தீர்ப்புகள் பெரிதும் சமூக நலம் சார்ந்து, பொது நோக்கோடும், அரசமைப்புச் சட்ட விதிகளுக் குச் சரியான வியாக்கியானம் தந்துள்ள தீர்ப்புகள் அவரது தனித் திறமை, நேர்மை, சட்ட ஞானத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுபவனாகவும் அமைந்துள் ளதை எவரும் மறுக்க முடியாது.
அவர்கள் மேலும் பல உயர் பதவிகளில் அமர்த்தப் படுவது – பொதுநலம், சமூக நலம், சட்டப் பிழையாமை ஆகிய கண்ணோட்டங்களில் மிகவும் விரும்பத்தக்கது; தமிழ் இலக்கிய குடும்பத்திலிருந்து வந்தவர்.
அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
22-5-2024