வேலைவாய்ப்பு
சென்னை அய்அய்டியின் வளாக நேர்காணல் மூலம் கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் அதிகப்படியான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக அய்அய்டி நிர்வாகம் தகவல்.
காய்ச்சல்
திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித் துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிப்பு
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் சர்வர் வேகம் குறைந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங் களை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
கட்டுப்பாடு…
தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், வழக்கம் போல கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அறிவித்துள்ளார்.
கடனுதவி…
தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்தில், நகைக் கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2024-2025 நிதியாண்டில் நகைக்கடன் ரூ.43 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை
போதைப் பொருள் ஒழிப்பில் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.