இராமேஸ்வரம், மே 7- இராம நாதபுரம் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையா டல் கூட்டம் இராமேசு வரத்தில் 5.5.2024 அன்று காலை 10.30 மணிக்கு நடை பெற்றது. மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் எம். முருகேசன் தலைமை வகித்தார்.
தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மாவட்ட செயலாளர் கோ.வ. அண்ணா ரவி முன்னிலை வகித்தார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டி யன் கூட்டத்தில் சுயமரி யாதை இயக்க நூற் றாண்டு விழா மற்றும் குடி அரசு நூற்றாண்டு விழா கூட்டத்தை நடத்து வதற்கு ஏற்பாடுகளையும் மற்றும் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட உலகின் ஒரே பகுத் தறிவு நாளேடு விடுதலை யின் பயன்கள் அதன் தொடர்ச்சியாக ஆசிரி யர் அவர்களின் அயராத உழைப்பின் பயனாக நாள் தோறும் நமக்கு கிடைக் கின்ற விடுதலை பற்றியும். நாம் விடுதலையை மக்க ளிடம் கொண்டு சேர்க்க வேண்டிய சூழலையும் விளக்கி உரையாற்றினார்.
எம்.எட்வர்ட் (இரா மேஸ்வரம் ஒன்றியம்) ஜே.எ.கெவின்குமார் (மாவட்ட பகுத்தறிவா ளர் கழகம்), ஜான் (இராமநாதபுரம் நகரம்), ஆர்.என்.பெரியார் செல்வன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) ஆகியோர் கருத்துரை வழங்கியதுடன் ஒவ்வொ ருவரும் 5 அல்லது 10 சந்தாக்கள் திரட்டித்தர உறுதி கூறி சந்தா புத்தகங் களை பெற்றுக் கொண் டனர்.
இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!
Leave a comment