19.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேற்கு வங்கத்தில் ராம நவமி விழாவில் திட்டமிட்டு வன்முறையை பாஜக நடத்தியது – மம்தா குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தென்னிந்தியாவில் 130 இடங்களில் 115 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும், ரேவந்த் நம்பிக்கை.
* நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும். இது சாதாரண தேர்தல் கிடையாது. நாட்டின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்று வதற்கான தேர்தல். – காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி
* 400 இடங்கள் என்கிறார் மோடி. அதில் பாதி வெல்வதே கடினம் என்கிறார் அரசியல் ஆய்வாளர் மோகன் குருசாமி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “2014 வரை நாட்டின் கடன் 53.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது எப்படி 205 லட்சம் கோடியாக உயர்ந்தது? பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இந்த விடயத்தில் மவுனம் ஏன்?” என்று மகாராட்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபால் தாதா திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விவிபிஏடி மூலம் சரிபார்க்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
தி இந்து:
*வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
தி டெலிகிராப்:
* வேலை கிடக்கட்டும். முதலில் உயிருடன் இருக்க வேண்டாமா? இது தான் மோடியின் புதிய இந்தியா – இசுலாமியர்களின் குமுறல்.
* பெண்களின் குடும்பத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேச்சு.
* தனது 10 ஆண்டு கால ஆட்சியின் செயல்திறன் ‘வெறும் டிரெய்லர்’ என்ற மோடியின் பேச்சுக்கு, டிரெய்லரிலேயே விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் முழு படமும் வந்தால் என்னாவது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் விமர்சனம்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a comment