பாசிசத்தின் ஆணிவேரை நாம் தேடவேண்டும் என்றால் ஹிந்து மகாசபை தலைவரும் ஆர்.எஸ்.எஸ்.அய் உருவாக்கிய அய்வரில் ஒருவருமான ஷிவ்ராம் பாலகிருஷ்ண மூஞ்சே என்ற சித்பவன் பார்ப்பனரின் வரலாற்றை அறியவேண்டும்.
மூஞ்சே, பால கங்காதர திலகரின் சீடர் ஆவார். மூஞ்சே நாசிக் நகரத்தில் இந்து மக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க பள்ளியை நிறுவினார்.
உலகில் மிகவும் மோசமான பாசிச தலைவர்கள் என்ற வரிசையில் 18 ஆம் நூற்றாண்டில் பெல்ஜியம் மன்னர் லியோபோர்ட் 2, ஜெர்மன் நாஷி தலைவர் அட்லாப் ஹிட்லர், இத்தாலிய பாசிச ஆட்சியாளர் பெனிட்டோ முசோலினி போன்றவர்களைக் கூறலாம்.
இவர்களை எழுதாமல் உலக வரலாற்றில் கொடூரமான பாசிச வரலாற்றை எழுதவே முடியாது.
இவர்களின் அரசியல் முறையை அறிந்துகொள்ள – ஒருவர் அங்கு சென்று சந்திக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன?
பாசிசமும் ஹிந்துத்துவாவும்
அவர்களின் பாசிசத்தை தாங் களும் கற்றுக்கொண்டு அதை கடைப் பிடிக்கவேண்டும் என்பதுதானே.
இத்தாலியில் வளர்ந்த பாசிசத்திற்கும் ஹிந்துத்துவத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு.
மூஞ்சே 1931இல் பாசிசத்தின் தந்தை என்று அறியப்பட்ட முசோலினியை நேரிலேயே சந்தித்தார். இந்தப் பயணத்தின் போது அவர் தெளிவாக கூறினார். நான் பாசிசத்தைக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன் என்று. அவருக்கு வரவேற்பு கொடுத்தது இத்தாலி பாசிச அரசு. பாசிஸ்டுகளைத் தயார் செய்யும் இராணுவப் பள்ளிக் கூடங்களைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் முசோலினியை மார்ச் 19, 1931 அன்று நண்பகல் 3 மணிக்கு பாசிச அரசின் தலைமைப் பீடமாகிய பாலசோ வெனிசியா என்னும் மாளிகையில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து 13 பக்கங்கள் அவர் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். அதில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“நான் அவருடைய அறைக்கு வரு கிறேன் என்றவுடன் அவர் எழுந்தார். சற்று நடந்து வந்து என்னை வரவேற்றார். நான்தான் டாக்டர் மூஞ்சே எனச் சொல்லிக் கொண்டே அவருடன் கை குலுக்கினேன். என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பார் போலும்… என்னோடு அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் என்னிடம் “இராணுவப் பயிற்சி தரும் பல்கலைக் கழகங்களை நீங்கள் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.
அதற்கு நான், “நான் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி தருவதில் ஆர்வம் உள்ளவன். ஆதலால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள இராணுவக் கல்லூரிகளைச் சென்று பார்த்தேன். ஆனால், அங்கு எல்லாம் என் மனம் திருப்திப் படவில்லை. ஏதோ அவர்கள் எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் இருக்கின்றனர்.
நான் இத்தாலியில் பாலீலா, பாசிச அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டேன். அவற்றால் நான் வெகுவாக கவரப்பட்டேன். இத்தாலிக்கு இது மிகவும் அவசியம். இவற்றில் எந்தத் தவறுமில்லை.
ஆனால், உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் பாசிச அமைப்புகளையும், உங்களையும் இடித்து எழுதுவதைப் படித்திருக்கிறேன்” எனப் பதில் சொன்னேன்.
மூஞ்சேயின் பாசிசக் கனவு
நான் சொல்லி முடித்ததும் முசோலினி என்னிடம் “இவை பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.
“மதிப்பிற்குறிய தலைவரே நான் இவற்றால் மிகவும் கவரப்பட்டுள்ளேன். வளரும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இது போன்ற அமைப்புகள் மிகவும் முக்கியம். இந்தியாவின் இராணுவ வளர்ச்சிக்கு இவை மிகவும் முக்கியம்.
நான் இதற்கான ஒரு அமைப்பை துவங்கத் திட்டமிட்டுள்ளேன் அதற்கான ஆரம்ப கால திட்டத்தோடு இதே பாசிச இலட்சியங்களுக்காகத்தான் தொடங்கினேன்.
வாய்ப்புக் கிடைத்தால் நான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் பாலீலா பயிற்சி முகாம் பற்றியும் பாசிச அமைப்புப் பற்றியும் புகழ்ந்து என் குரலை எழுப்புவேன்.
முசோலினி மிகவும் சந்தோஷப்பட்டார்.
“நன்றி. ஆனால், உங்கள் நாட்டில் மிகவும் கடினம். உங்கள் முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” இதைச் சொல்லிவிட்டு அவர் எழுந்தார். நானும் எழுந்தேன்.
ஆர்.எஸ்.எஸ்.அய் தொடங்கியவர்களில் ஒருவரான ஹெட்கேவர் – இவரை மூஞ்சே தான் வளர்த்தார். பின்னர் மூஞ்சே தான் கல்கத்தாவிற்கு தேசிய மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார். ஆனால் உண்மையில் வங்கத்தில் செயல்படும் ஹிந்துத்துவ ஆயுதக்குழு இயக்கத்தோடு தொடர்பை ஏற்படுத்துவதுதான் அவரை அனுப்பியதன் நோக்கம். ஆதாரம்: Dr. Hedgewar, The Epoch Maker By B.V.Deshpande and S.R. Ramasamy, Sahithya Sindhu, Banglore,1931,pages 14 – 32)
மூஞ்சே தன் வாழ்நாளில் எத்தனையோ பேரை சந்தித்திருப்பார். முசோலினியை சந்தித்தவுடன் அவரை பாசிஸ்டு என சொல்லி விடுவதா? இல்லை. பாசிசத்திற்கும் நமது நாட்டில் அதனை வளர்த்தவர்களுக்கும் தொடர்பு ஒரு சந்திப்பில் முகிழ்ந்ததல்ல. அது யதார்த்தமாக மூஞ்சே முசோலினியை சந்தித்ததால் வந்ததும் அல்ல
உண்மையில் பாசிசம் இத்தாலியில் அரும்பியவுடனேயே இங்கே அது பற்றிய விவாதங்கள் இடம் பெறத்தொடங்கி விட்டன. 1924 முதல் 1935 வரை பாலகங்காதர திலகரின் மராத்திய பத்திரிகை “கேசரி” முசோலினி, இத்தாலி பாசிசம் இவற்றைப் பற்றிய கட்டுரைகளையும் தலையங்கங்களையும் வெளியிட்டது.
இவை பாசிசத்தை நமது நாட்டு பாசிஸ்டுகளின் மனங்களில் பதிய வைத்தது.
ஒரே நாடு – ஒரே தேர்தல்
இத்தாலி சர்வதிகார நாடாக ஆனதும் இங்கே கேசரி பத்திரிகை அதைப் பற்றி புகழ்ந்து எழுதியது.
இத்தாலியில் நாடாளுமன்ற உறுப்பினர் களை தனது விருப்பப்படி நியமித்தார் முசோலினி. பின்னர் ஜனநாயகத்தை இல்லாமல் செய்தார். நாடாளுமன்றத்தை அப்புறப்படுத்தி விட்டு “ஃபாசிச பெரும் சபை” (The Great Council of Fascism) கொண்டு வந்தார். இதை கேசரி July 17, 1928இல் புகழ்ந்து எழுதியது.
அதில் ஒரு மனிதனை பின்பற்றுவதே ஜனநாயகத்தை விட சிறந்தது என எழுதியது. அதைத்தான் இந்தியாவில் இவர்கள் ஒற்றைத் தலைவனுக்குப் பணிதல் என்கின்றார்கள்.
இன்று ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஒரே ரேசன் கார்ட், ஒரே சீருடை, ஒரே தேர்தல் என அனைத்தும் இந்த ஒற்றைத் தலைமைக்கு பணிதல் என்பதின் கிளைகள் தான்.
உலகில் பல நாடுகளில் மக்களாட்சி மிளிர்ந்துகொண்டு இருந்த காலத்தில் பாசிசத்தோடு இவர்கள் ஏன் நெருக்க மானார்கள் என்றால் பாசிசம் என்பது பார்ப்பனியத்தின் பிரதிதான். ஆகையால். தான் இவர்கள் பாசிசத்தோடு அய்க்கிய மானார்கள்.
1924களிலேயே மராத்தி மொழியில் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர், மூஞ்சே போன் றோர்களுக்கு, இத்தாலி நாட்டில் நடந்த நிகழ்வுகளுக்கும் தொடர்புகளை ஏற்படுத் தியது டி.வி.தஃமாநகர் என்பவர் தான்.
இவர் அப்போது இலண்டனில் இருந்தார். இவர் பாசிசத்தால் கவரப்பட்டார். அதனால் இத்தாலிய நிகழ்வுகளை இலண்டன் வழி இந்த கேசரி பத்திரிகையில் கொண்டு வந்தார். இப்படி இந்தியாவில் பாசிச சிந்தனை விதைகளைத் தூவ இவர் பெரிதும் பங்காற்றினார்.
பாசிசமும் – நாசிசமும்
“முசோலினியும் பாசிசமும்” என்றொரு நூலையும் வெளியிடும் அளவுக்கு பாசிசத்தில் மூழ்கிப் போயிருந்தார்.
இந்தப் பின்னணியில் 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகர் ஹெட்கேவர், ஒரு மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்
மாநாட்டின் மய்யப் பொருள் “முசோலினியும் ஃபாசிசமும்”. மாநாட்டுக்கு ஏற்பாடுகளைச் செய்த கவ்டி சாஸ்திரி என்பவர் அதில் இறுதி உரையை ஆற்றினார்.
அதன் பின்னர் மார்ச் மாதம் 31ஆம் நாள் 1934ஆம் ஆண்டு மூஞ்சே ஹெட்கேவர், லாலு கோகலே ஆகியோர் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்கள்
இந்த சந்திப்பின் மய்யப் பொருள் : The Military Organization of Hindus along Italian and German Lines. இதன் பொருள் : “இத்தாலிய (பாசிசம்), ஜெர்மானிய (நாசிசம்) இவற்றின் பின்னணியில் ஹிந்துக்களைக் கட்டி எழுப்புவது.
ஹெட்கேவர் முதலானோர் இங்கே என்ன செய்ய விரும்பினார்கள் என்பதை 1933களிலேயே British உளவுத்துறை கணித்த இரகசியக் குறிப்பு இப்படிக் கூறிற்று: The Sangh hopes to be in future India what the Fascists are to italy & the Nazis to Germany. (NAI – Poll Department, 88-33, அதாவது, “ஃபாசிஸ்டுகள் எப்படி இத்தாலியில் இருக்கின்றார்களோ, நாசிகள் எப்படி ஜெர்மனியில் இருக்கின்றார்களோ அதேபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதிர் காலத்தில் இந்தியாவில் இருக்கும்.”
இதன் தொடர்ச்சியைத்தான் மோடியின் ஆட்சியில் நாம் கடந்த 10 ஆண்டுகளாக கண்டு வந்தது. ஒரே இரவில் ஒட்டுமொத்த நாட்டின் தலைவிதியையும் மாற்றிக்காட்டினேன் என்று பெருமையுடன் கூறும் பண மதிப்பிழப்பை கொண்டு வருகிறார்.
முதல் நாள் வட்டிக்கு பணம் வாங்கி பொருட்களை வாங்கிப்போட்டு விற்றுப் பணமாக்கி முதலோடு வட்டியை திருப்பி கொடுக்கும் ஏழை வணிகர் பற்றியும் மறு நாள் வேலைக்குச் சென்றால்தான் இரவு குடும்பத்திற்கு உணவு என்ற நிலையில் இருக்கும் கூலித்தொழிலாளி குறித்தும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் முழு அடைப்பை அறிவிக்கிறார்.
இது எல்லாம் பாசிச நவடிக்கையின் ஒரு தொகுதிதான். இவர்களால் வரும் பேராபத்தை தேர்தலில் நாம் போடும் வாக்குகள் மட்டுமே தடுத்து நிறுத்தும்.
Superb