31.3.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ தெலங்கானாவில் சில தொகுதிகளில் ஒவைசியின் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தர யோசனை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ஆளுநர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும், மசோதாக்களில் மீது அமர்ந்திருக்கக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ புதிய தொலைத்தொடர்பு மசோதா குறித்து பாஜகவிடம் கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி, செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.
தி இந்து:
♦இந்தியப் பேரணி என்பது ஜனநாயகத்தைக் காப்பாற் றவே தவிர, ஒரு தனிநபருக்காக மட்டும் அல்ல – காங்கிரஸ்.
♦ மனித மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தயாரித்த இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024இல் படித்த இளைஞர்களுக்கும் வேலை கிடைக் காதது ஏன்? தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு ஏன் குறைவாக உள்ளது? என்பது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது.
♦”இந்தக் கடைசி நேரத்தில் தொடங்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை, இது பொதுமக்கள் மீது பாஜகவின் அவமதிப்பை பிரதிபலிக்கிறது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
தி டெலிகிராப்:
♦ மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கருநாடகா மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாஜவிலிருந்தும் விலகிய தேஜஸ்வினி கவுடா, காங்கிரஸ் கட்சியில் இணைந் தார்.
ஜனநாயகம், சமூக நீதி நிலைபெற வேண்டுமானால் இந்திய அணிக்கு வாக்களியுங்கள். ‘வரவிருக்கும் தேர்தல் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒன்று. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வை பேக்கிங் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது’ என, பொதுமக்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
♦ மக்களவைத் தேர்தலுக்கான ஆளுங்கட்சியின் பிர சாரத்தை இடையூறு செய்து, புலனாய்வு அமைப்புகளை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது, தேர்தல் ஆணையத் திடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார்
♦ அசாமின் உடல்குரி மாவட்டத்தில், பாதுகாப்பாக வைக் கப்பட்ட வாக்காளர் சரிபார்க்கும் சீட்டு (VVPAT) காணவில்லை – அதிகாரிகள் தேடுகிறார்கள். (தேர்தலுக்கு முன்பே இந்த கதி).
♦ இமாச்சல பிரதேசத்தின் மத்திய பல்கலைக்கழகம் தேசிய திட்டத்தின் கீழ் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ‘நடைமுறைப் பேராசிரியராக’ நியமனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் நோக்கம் என்றாலும், ஒன்றிய அரசு அதைச் செயல்படுத்திய திடீர் வழி (நவம்பர் 8, 2016 முதல்) சட்டத்தை மீறுபவர்கள் தங்களுடைய கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியது. மேலும், பழைய நோட்டுகளை புதிய கரன்சியாக மாற்ற போராடிய சாமானியர் களுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது,” என உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேச்சு.
– குடந்தை கருணா