தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.3.2024) திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி அவர்களையும், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எஸ். இரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முனைவர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம், செல்வராஜ், பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் பூண்டி கலைவாணன், துரை சந்திரசேகரன், அண்ணா துரை, கவுதமன் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளனர்.
திருவாரூர், மார்ச் 24- இந்தியாவின் அத்தியாயத்தில் புதிய வரலாற்றை எழுத்தக்கூடிய கூட்டமாக இந்த கூட் டம் அமைந்துள்ளது என திரு வாரூர் அருகே கொரடாச்சேரியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.
திருவாரூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் கூறிய தாவது:
நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்துள்ளேன். உங்க ளில் ஒருவனாக உங்களிடம் உரி மையோடு வாக்குகள் கேட்டு வந்துள்ளேன்.
இந்திய அத்தியாயத்தில் புதிய வரலாற்றை இந்தக் கூட்டம் படைக்க உள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
இந்தியாவில் உள்ள எல்லா கட்ட மைப்புகளை பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம் இருக்காது. நாட்டில் மாநிலங்களும் இருக் காது.
பா.ஜ.கவின் பாணி ஒரு சர்வாதி காரம்; காஷ்மீர் நிலை தமிழ் நாட் டிற்கும் நேரலாம். அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்கிறார்.
தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்கு தமிழ்நாட்டு மக்களும் தனது வாக்கை தர மாட்டார்கள்.
தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்று இருந்தவரின் பிழைப்பை இந் தியா கூட்டனி கெடுத்துவிட்டது. தூக் கத்தில் இருந்து எழுந்த பிரதமர் மோடி தரக்குறைவாக பேசுகிறார்.
தி.மு.க.வினரை தீவிரமாக வேலை செய்ய வைப்பதே இந்த எதிர் தாக்கு தல்தான்.
இதுவரை எந்த ஆளுநரும் உச்ச நீதிமன்றத்தால் இவ்வளவு கண்ட னத்துக்கு ஆளானது இல்லை. வெட் கம், மானம், சூடு, சொரணை இருந்தால் ஆளுநர் பதவி விலகியிருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத் தில் எதிர்க்கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கை நடக்கிறது.
இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
தேர்தல் வாக்குறுதியில் சொல் லாத பல திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
தமிழ், தமிழ்நாடு, தமிழனத்துக்கு விரோதமான கட்சி பா.ஜ.க.. மாநிலத்துக்கு விரோதமான பாஜக, மாநிலத்தை கண்டுகொள்ளாத அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்த வேண்டும்.
இந்தியா கூட்டணியை ஆதரிப் போம்; ஒளி மயமான எதிர் காலத்தை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.