புதுடில்லி, டிச.16 கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் இதுவரை, அமலாக்கத்துறை பல்வேறு பணமோசடி வழக்குகளில் மேற்கொண்ட சோத னையில் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்புள்ள சொத் துகளை முடக்கியுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் பொருளாதார குற்ற வாளிகளிடமிருந்து எவ்வளவு சொத்துகள் மீட்கப் பட்டுள்ள என்று மாநிலங்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூ தியத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (15.12.2023) எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் அவர், “2014 ஜனவரி முதல் 2023 அக்டோபர் வரையில் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் 2019-க்குப் பிறகான 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.69,000 கோடி மதிப் புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட் டவர்கள் வங்கியில் பெரும் தொகை கடன் பெற்று, அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடினர். இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு 10 பேரை தப்பியோடிய குற்றவாளிகளாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் “கடந்த 4 ஆண்டுகளில், வெளிநாடு தப்பியோடிய பொரு ளாதார குற்றவாளிகளில் நால்வரை அமலாக்கத் துறை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது.
மேலும், 3 பேரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.