டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் – 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர்
ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன் என துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
* உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியன் நியமனம்; தஞ்சை மாவட்டத்திற்கு ஓர் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
*தமிழ்நாடு அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, மனிதவள மேம்பாடு துறை என தாழ்த்தப்பட் டோருக்கு முக்கிய துறைகளில் பதவி வாய்ப்பை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அரியானா தேர்தலில் பாஜகவை வலுப்படுத்த கிராமத்தினர் வாக்குகளைக் கவர ஆர்.எஸ்.எஸ். முயற்சி.
தி இந்து:
* நகர்ப்புற சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 92% பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆய்வில் தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரிப்பு. சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி யிடும் நிலையில், முதலமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ளது.
* பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் அரசமைப்புச் சட்டத்தை, அம்பேத்கரை மதிக்கவில்லை – மல்லி கார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு.
* தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு; தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி.
* ஒரே தேசம், ஒரே தேர்தல்: இன்னுமொரு ஜும்லா – கபில் சிபல் சாடல்.
தி டெலிகிராப்:
*மாற்றத்திற்கான மனநிலையில் அரியானா: பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலும் பாஜக தோல்வி அடையும், ஹிசார் பாஜக போட்டி வேட்பாளர் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தில் தலைவராக உள்ள சாவித்திரி ஜிண்டால், பாஜகவுக்கு எச்சரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முந்தைய சுற்றுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் சுற்றில், அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., கட்-ஆஃப்கள் ஓரளவு அதிகரித்துள்ளன.
– குடந்தை கருணா