தமிழர் தலைவர் பங்கேற்று பாராட்டி சிறப்பித்தார்
பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல்!
சென்னை, செப்.12- வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ் மொழியின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா, அரசுப் பணி நிறைவு – பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று பாராட்டி சிறப்பித்தார்.
செய்யாறு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி இணையரின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – வி.வெங்கட்ராமன் அவர்களின் அரசுப் பணி நிறைவு – பாராட்டு விழா திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 9.9.2024 அன்று முற்பகல் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த முதுபெரும் சுயமரியாதை வீரர் முரஅரி அவர்களின் மகன் மு.தென்னரசு இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.
காங்கிரசு கட்சியின் பிரமுகர் சண்முகம், செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஒ.தயாளன், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி, தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறி யாளர் வேல்.சோ.நெடுமாறன், செய்யாறு கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் மணி விழா காணும் தோழர் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி இணையரை வாழ்த்தி உரையாற்றினர்.
தோழர் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி, மகள் வெ.எழில்மதி, வி.தேவகுமார் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.
முன்னதாக இவ்விழா திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழியின் அறுபதாம் அகவையைப் போற்றும் வகையில் அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
இவ்விழாவிற்கு தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தோழர் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி ஆகியோரின் கழகப் பணி – பொதுப் பணிகளை நினைவுகூர்ந்து வாழ்த்தி பாராட்டுரையை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக தோழர் வி.வெங்கட் ராமன் அவர்களுக்கு தமிழர் தலை வரின் வாழ்விணையர் மோகனா அம்மையார் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். மு.தமிழ்மொழிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களிடம் ரூ.60,000 ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக வழங்கினர்.
வி.வெங்கட்ராமனின் மைத்துனர் ஆரணி மு.தென்னரசு பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களிடம் வழங்கினார்.
முன்னதாக பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் தோழர் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ் மொழி இணையர் மற்றும் கழகத் தோழர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், ஆஸ்திரேலியர் அ.மகிழ்நன், குடந்தை இளங்கோ, சி.வெற்றிச்செல்வி, கி.தளபதிராஜ், கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், இருதய மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் நெ.பரத்குரு, மாணவர் கழகத் தோழர் வெ.இளஞ்செழியன், வேளச்சேரி வி.சாந்தா கணேசன், க.சங்கர், ர.ஜெயந்தி ரவி, கி.பிரியா சிறீதர், மு.சிவராஜ், ர.நந்தன் பாரதி, வெ.தயாளன், பழனி, மணி மேகலை, முக்கூர் ஜெ.சேட்டு, ப.சசி ரேகா, பிரியதர்சினி, கா.தரணி, தே.கயல்விழி, வடமணப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ந.வேதபுரி, டி.சின்னதுரை, கணினி இயக்குநர் பி.ரூபேஷ்குமார், தலைமை ஆசிரியர் எஸ்.சத்தியமூர்த்தி, க.கோவேந்தன், எம்.கவுதமன், வ.திருவாசகம், செய்யாறு கழக மாவட்டச் செய லாளர் வடமணப்பாக்கம் பொன்.சுந்தர், மு.வெங்கடேசன், யு.ர.ஜேஸ், செய்யாறு எல்.அய்.சி. முகவர் க.பாண்டியன், ஆரணி அசோகன், ஆரணி வாசுதேவன், காஞ்சி இளையவேல், அரக்கோணம் மு.சோமசுந்தரம், ஓட்டுநர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.