– முனைவர் கோ. ஒளிவண்ணன்
மதுரை, ஆக. 13- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் சென்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை அதன் தொடர்ச்சியாக 2024,ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மதுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டுதலின்படி, திட்டமிட்டதை விடக் கூடுதல் சிறப்புடன் நடந்தேறியது.
பயிற்சிப் பட்டறை அறிவிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நூற்றுக்கும் மேலானவர்கள் பதிவு செய்து வெற்றிக்கு அச்சாரம் சூட்டினார்கள்.
மதுரை, மதுரை புறநகர் ,அருகிலுள்ள மாவட்டங்கள் எனப் பல பகுதிகளிலிருந்து ஏராளமான கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் பதிவு செய்திருந்தார்கள். திட்டமிட்டதைவிடக் கூடுதலாகப் பதிவுகள் வந்தமையால் 10 நாட்களுக்கு முன்பாகவே பதிவுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சனிக்கிழமை ஆகஸ்ட் 10 காலை யிலேயே உலகத் தமிழ்ச் சங்க வளாகம் கோலாகலம் ஆகியது. மாணவ, மாணவிகள் அலையெனத் திரண்டு வந்தார்கள். இது தவிர மாணவர் அல்லாத பிற வளரும் படைப்பாளிகளும் அரங்கத்தை நிறைத்தனர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு தலைமையில் மதுரை மாவட்டத்துப் பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் தேனீக்கள் போலச் சுறு சுறுப்பாக இயங்கி வருபவர்களுக்குக் கழுத்துப் பட்டைகளும் நோட்டுப் புத்தகங் களும் எழுது கருவிகளும் முறையாக வழங்கினர். மதுரை நட்புத் தமிழ் வட் டத்தின் தலைவர் புலவர் நா.நா.ஆறு முகம் மற்றும் சுப.முருகானந்தத்தின் நண்பர்கள் இதற்கான பொருளாதாரப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர்.திட்ட மிட்டபடி சரியான நேரத்திற்கு நிகழ்ச்சி தொடங்கியது.
இப்பட்டறையின் தொடக்கவிழாவில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ) முனைவர் அவ்வை அருள் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், “மாணவப் பருவம் என்பது சேமிப்புப் பருவம். நாம் கற்ற இலக்கியங்களை மனதில் இருத்திக் கொள்வதன்மூலம் வருங்காலத்தில் பயன்பெறலாம்.
மாணவர்கள் இப்பயிற்சிப் பட்டறை யைப் பயன்படுத்தி எதிர் காலத்தில் சிறந்த படைப்பாளராக உருவாகலாம். வெவ்வேறு துறைகளில் திறமை பெற்ற வல்லுநர்கள் வாயிலாகப் பட்டை தீட்டப்பட உள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.
மேலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களின் எழுத்து இச்சமூகத்தில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் இராஜா கோவிந்தசாமி இது போன்ற முயற்சிகள் சமூகத்தில் பெரும் மாற்றத்தை விளை விக்கும் என்றார். அவர் உரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளைக் குறித்துப் பேசினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு நோக்கவுரை ஆற்றினார். கருத்தாளர் என்று தன்னை தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார். ஜாதி ஒழிய வேண்டும்,பெண்கள் உரிமை பெற வேண்டும் என்ற அடிப்படைக் கருத்து களின் அடிப்படையில் எழுத்தாளர்கள் எழுதவேண்டும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்றோர் பிரச்சாரப் பயணம் செய்து கொண்டே இருந்தவர்கள். ஆனால் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தவர்கள். இன்றைக்கு அப்படித்தான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இருக்கின்றார்.
இதுபோன்ற பயிற்சிகள் மாதம் தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும், சமூக நீதிக் கருத்தின் அடிப்படையில் எழுத வரும் வளரும் எழுத்தாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் முதலாவது அமர்வில் ‘சிறுகதை, புதினம் புனைவது எப்படி?” என்ற தலைப்பில் முனைவர் ந.முருகேச பாண்டியனும், இரண்டாவது அமர்வில் ‘கட்டுகளை உடைப்போம் கட்டுரை தீட்டுவோம்’ என்ற தலைப்பில் எழுத் தாளர் அ.முத்துக்கிருஷ்ணனும், மூன்றாவது அமர்வில் ‘செயற்கை நுண்ணறிவும் படைப்புலகமும்’ என்ற தலைப்பில் முனைவர் கோ.ஒளி வண்ணனும், நான்காம் அமர்வில் “சிறார் இலக்கியம் படைப்பது எப்படி?” என்ற தலைப்பில் துபாய் எழுத்தாளர் முனைவர் சிறீரோகிணியும் பயிற்சி வழங்கினர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்றினார். அவர் தனது உரையில்:
இந்தப் பயிற்சியின் நோக்கத்தைப் பற்றியும், எழுத்து எவ்வளவு வலிமை யானது என்பதையும், இன்றைய நவீன தொழில் நுட்பங்களையும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டு திரைப்படம் சார்ந்த பல்வேறு விசயங்களைத் தொட்டுப் பேசினார். திராவிட இயக்கம் பற்றியும் தந்தை பெரியார் அவர்களது எழுத்துகளைப் பற்றியும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறது என்பதையும் குறிப்பிட்டு 40 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றினார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தின் மாணவர் தேவராஜ பாண்டியன் நன்றியுரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையர் முனைவர் ஜ.ஜான்சிராணி நிகழ்வினை ஒருங் கிணைத்தார்.
இப்பயிற்சிப் பட்டறையில் தஞ்சாவூர், சிவகாசி, திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை எனப் பல்வேறு ஊர்களிலிருந்து கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் தமிழார்வலர்களும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
எல்லா அமர்வுகளிலும் கலந்து கொண்ட மாணவர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றது கருத்துரையாளர்களுக்கு உற்சாகம் அளித்தது.
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கமும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் வாருங்கள் படைப்போம் குழுவும் இணைந்து ‘வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்வினை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்டவளாகக் கூட்ட அரங்கில் நடத்தின.
பிற்பகலில் அனைவருக்கும் உணவும் இருவேளைக் குளம்பி தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் அ.முருகான்ந்தம், சே.முனிய சாமி, ராமச்சந்திரன் மற்றும் , பல்வேறு நல்லுள்ளம் கொண்ட தோழர்கள், வாருங்கள் படைப்போம் குழுவினர் அளித்த நிதியுதவி கொண்டு இப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது.
அடுத்து 2024,செப்டம்பர் 21ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பயிற்சிப் பட்டறைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தோழர்கள்.