மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்று முனியசாமி – தனபாக்கியம் இணையருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். முனியசாமி தனது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து ‘விறகு வண்டி முதல்… விமானம் வரை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதனை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டார்கள். (மதுரை, 27.6.2024)
மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், சே. முனியசாமி, வே. செல்வம், அ.முருகானந்தம், சுப. முருகானந்தம், தே. எடிசன் ராஜா, இரா.லீ. சுரேஷ், வா. நேரு, பெரியார்பித்தன், சிவானந்தம், எரிமலை, ராக்கு தங்கம், முருகேசன், போட்டோ ராதா மற்றும் தோழர்கள் வரவேற்றனர்.