துணுக்குச் செய்தி
திரு. பேல் என்பவர், சாரதா சட்டத்தை மீறி மணம் செய்ததாக ஒருவர் மீது மீரத்தில் வழக்குக் கொண்டுவந்தார். மீரத் ஜில்லா மாஜிஸ்டிரேட், கலியாணம் நடந்தது உண்மை என்ற போதிலும், சாரதா சட்டப்படி ‘கலியாணப் பூர்த்தி’தான் சட்டத்தை மீறுவதாகுமெனவும், சட்டப்படி வயது, வரும் வரையில் தம்பதிகள் சேர்ந்து வாழாதிருந்தால், அப்போது, சாரதா சட்டம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாதெனக்கூறி, கேசைத் தள்ளி விட்டார். தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழுவதில்லை என 200 ரூபாய்க்கு ஜாமீன் பத்திரம் எழுதித் தரவேண்டும், வருஷா வருஷம் ஏப்ரல் மாதம், தம்பதிகள் கோர்ட்டுக்கு வர வேண்டுமென்றும், எப்போது டாக்டர் அவர்களுக்கு யுக்த வயது வந்ததாகக் கூறுகிறாரோ அப்போதுதான் ‘சாந்தி’ செய்து வைக்க வேண்டுமென்றும் மாஜிஸ்டிரேட் தீர்ப்பு கூறினார்.
– ‘விடுதலை’ – 25.04.1936