பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஆக.24– பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று மீண்டும் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.11 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீக்கப்பட்ட 65 லட்சம் பீகார் வாக்காளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டதாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. தவறாக நீக்கப்பட்டி ருந்தால் மீண்டும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க லாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், பல ஆயிரம் வாக்காளர்கள் வெளி மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளதாகவும், மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பதில் சிக்கல் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விண்ணப்பம் 6 மூலம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர் களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர். 11 ஆவ ணங்களில் ஒன்றைகட்டாயமாக வழங்க வேண்டும் என்று வாக்காளர்களை நிர்ப்பந்திக்கக்கூடாதுஎன்றும், விண்ணப் பங்களை நேரில் வழங்க வேண்டும் என்றுகட்டாயப்படுத்தக் கூடாதுஎனவும் தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலமாக பெற வேண்டும் எனக் கூறினர். மேலும், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட் டியலில் மீண்டும் சேர்க்க உதவவேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *