கருநாடகத்திலும் மொழி உரிமைக் கொள்கை – இருமொழிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, ஆக.10– கருநாடகத்தில் இருமொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையாவிடம் கருநாடக கல்வி கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இருமொழிக் கொள்கை

ஒன்றிய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுத்தது.இதை முந்தைய பா.ஜனதா அரசு ஏற்று அமல்படுத்தியது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காங்கிரஸ் அரசு, தேசிய கல்விக் கொள்கையை கைவிடுவதாக அறிவித்தது. மாநிலத் திற்கு சொந்தமாக கல்விக் கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முதலமைச்சர் சித்தரா மையாவிடம் கருநாடக கல்விக் கொள்கை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

கருநாடகத்தில் தற்போது மும்மொழிக் கொள்கை பின்பற்றப் படுகிறது. அதாவது கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. இதை கைவிட்டு இருமொழிக் கொள்கையை (கன்னடம், ஆங்கிலம் கற்பிக்கும் முறை) பின்பற்ற வேண்டும் என்றும், 5-ம் வகுப்பு வரை தொடக்க கல்வியை கன்னடமொழியில் வழங்க வேண்டும், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை கன்னடத்தை விருப்ப மொழியாக பயில அனு மதிக்க வேண்டும்.

பயிற்சி மய்யம்

இருமொழி கொள்கை என்றால் தாய்மொழி அதாவது கன்னடம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்பட்ட வேண்டும். இதை அமல்படுத்த ஆசிரியர்களுக்கு இரு மொழி புலமை குறித்து பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக பயிற்சி மய்யத்தை உருவாக்க வேண்டும். பள்ளிக் கல்வியில் 2, 8, 4 என்ற முறையை பின்பற்ற வேண்டும்.

அதாவது 2 ஆண்டுகள் என்பது மழலை வகுப்புகள், 8 ஆண்டுகள் தொடக்க கல்வி, 4 ஆண்டுகள் பள்ளி கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.

ஏற்ெகனவே உள்ள தொடக்கப் பள்ளிகளில் 2 ஆண்டுகள் மழலை வகுப்புகளை தொடங்க வேண்டும். தனியார் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 1-ஆம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கைக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மொத்தம் 2 ஆயிரத்து 197 பக்கங்களை கொண்டது ஆகும்.

உள்ள  கருநாடகத்தில் கன்னட அமைப்புகள், இந்தியை உள்ள டக்கியுள்ள மும்மொழிக் கொள்கையை கைவிட்டு விட்டு இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *