பீகாரைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டின் வாக்காளர்களாக சேர்க்க முயற்சிப்பதா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வைகோ கண்டனம்

சென்னை, ஆக.5- ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (4.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள், அங்குள்ள வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநில தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ? அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலைக்காக வந்து தங்கியிருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள், பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்களின் பெயரை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். சுமார் 75 லட்சம் பேர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகும்.

தமிழ்நாட்டை குறி வைத்து இருக்கும் பா.ஜனதா, வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தேர்தலில், ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. தலைமை தேர்தல் ஆணையம், வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *