கழகக் களத்தில்…!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

3.8.2025 ஞாயிற்றுக்கிழமை
சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை  5:00 மணி * இடம்: மகிழ் இல்லம். 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப் பேட்டை, சேலம் *தலைமை: ச.கார்த்திக்  (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * வரவேற்பு: பா.விஜய் (இளைஞரணி மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்) * நோக்கவுரை: நாத்திக பொன்முடி (இளைஞரணி மாநில செயலாளர்) * கருத்துரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்), சி. பூபதி (மாவட்டச் செயலாளர்) *பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல் * நன்றியுரை: வீ.மணிமாறன் இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர்.

திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4:00 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் * வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்டத் துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * ஏற்பாடு: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்).

4.8.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1052

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்) * தலைப்பு: நீதிக்கெட்டது யாரால்? – நூல் திறவுரை * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *