கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.8.2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

* பாஜவுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டு –  ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* காங்கிரஸ் கட்சி சார்பில் ’சட்ட மாநாடு’ இன்று டில்லியில் நடைபெறுகிறது. ரேவந்த் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

* மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அனைவரும் விடுதலை? நீதி மறுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது தலையங்கம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “பீகார், தமிழ்நாடு, உ.பி. தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் ஓபிசிக்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்” காங்கிரஸ் ஓபிசி துறை தலைவர் அனில் ஜெய்ஹிந்த் பேட்டி.

தி இந்து:

* செப்.9ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல்; அதே நாளில் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தி டெலிகிராப்:

* வர்த்தகப் போர் தொடுத்த அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட 70 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு. 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகம்.

* மாநிலங்களவையில் உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய சிஅய்எஸ்எப் வீரர்கள்: ‘நாடாளுமன்றமா அல்லது கோட்டையா?’:எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கண்டனம்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *