‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர் கடிதம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாக  மருத்துவமனையில் இருந்து வருவதை அறிந்து, கவலை அடைகிறோம். விரைவில் நலம் பெற்று வரவேண்டுமென்று விரும்புகிறோம்.

ஏற்ெகனவே திட்டமிட்டிருந்த களக்காடு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் தங்களிடம் நேரில் வழங்க வேண்டு மென்று நினைத்திருந்த ‘‘பெரியார் உலகம்” நன்கொடை நிதியினை தங்களின் 23-07-2025 ‘விடுதலை’ அறிக்கை யில் கூறியிருந்தபடி, இன்று PSRPI PERIYAR WORLD I.O.B. வங்கி கணக்கிற்கு என்னுடைய S.B.I வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சமும், என்னுடைய வாழ்விணையர் சாந்தி அவர்களின் Bank of India வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சமும் ஆக மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் ‘பெரியார் உலகம்” நன்கொடை நிதியாக அனுப்பியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், தாங்கள் சரியாக ஓய்வெடுத்து உடல் நலம் பேணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சீ.டேவிட் செல்லத்துரை

மேலமெஞ்ஞானபுரம்,தென்காசி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *