லிபியாவில் துயர சம்பவம் கடலில் படகு கவிழ்ந்து 25 அகதிகள் சாவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திரிபோலி, ஜூலை.31- லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து 25 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காணா மல் போன 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

புகலிடம் தேடி

வட ஆப்பிரிக்க நாடாக லிபியா உள்ளது. கடாபி ஆட்சியின் கீழ்சர்வாதிகார நாடாக இருந்த லிபியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு கிளர்ச்சி ஏற்பட்டது. அய்ரோப்பிய ராணுவ அமைப்பான நேட்டோ ராணுவத்தினர் உதவியுடன் ஏற்பட்ட அந்த கிளர்ச்சியில் கடாபி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கிளர்ச்சியாளர்கள் சார்பில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் மத்திய–ஆப்பிரிக்க நாடுகளாக சாட், சூடான், நைஜர், மாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து லிபியாவில் மக்கள் குடியேறுவது அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அங்கு இருந்து புகலிடம் தேடி அய்ரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வது தொடர்ந்து வருகிறது.

25 அகதிகள் சாவு

இந்தநிலையில் லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக அய்ரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக நுழைய முயன்றனர். லிபியாவின் கிழக்கு கடலோர நகரமான தோப்ரூக்கில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் பெரும் சீற்றம் உருவானது. இதனால் நடுக்கடலில் அந்த படகு மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் துனிசியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக சென்று கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *