பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தல் தீர்மானம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூலை30– பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில் சென்று பங்கேற்பது என்றும் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,

27.07.2025, ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ் வாயிலில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

‘பெரியார் உலகம்’  நிதி திரட்டல், செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழா, ‘விடுதலை ஏடு’ சந்தா சேர்த்தல், இயக்க பணிகள் குறித்து துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, இளைஞரணி மாவட்ட செயலாளர் பெரியார் யுவராஜ், துணைத் தலைவர் அ.அன்பு, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, பகுதி கழக பொறுப்பாளர்கள் சூளைமேடு நல்.இராமச் சந்திரன், இராயப்பேட்டை கோ.அரிகரன், எம்.ஜி.ஆர்.நகர் கண்ணன் ஆகியோர் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் கூறினர்.

மாநில  இளைஞரணி  துணைச் செயலாளர் சோ.சுரேஷ் செயல் திட்டங்கள் வகுப்பது குறித்தும், குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயலாற்றுவது  குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

அய்ஸ் அவுஸ் உதயா, மா.இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘பெரியார் உலகம்’  நிதியை பெருமளவில் திரட்டி தருவது என்றும்,  செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பெருமளவில் வாகனங்களில் சென்று பங்கேற்பது என்றும், மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், நெகிழி திரை வைத்தல்,  தெருமுனைக் கூட்டம் நடத்தி பரப்புரை செய்வது என்றும், ‘விடுதலை ஏட்டிற்கு’ சந்தாக்களை சேர்த்தல் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் கோட்டூர் புரம் ச.தாஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *