முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் கேரள மாநில மேனாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் கேரள மாநில முதலமைச்சருமான வெள்ளிக் காகத்து சங்கரன் அச்சுதானந்தன் (வயது 101) மறைவுக்கு (21.7.2025) திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர் இவர் ஆவார்.

அய்ந்து முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை முதலமைச்சராகவும் இருந்தவர். ஒன்பது ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். 12 ஆண்டுகள் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு ஏழாண்டுகள் வரை சிறைச் சென்றவர்.

வறுமையின் காரணமாக ஏழாம் வகுப்பைத் தாண்டி படிக்க இயலவில்லை.

தனது 17ஆம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து  தொண்டாற்றிய அப்பழுக்கற்ற பொதுவுடைமைவாதியும், இந்தியாவின் மூத்த தலைவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் மறைவு – பொது வாழ்வில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.

அவரது பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் திராவிடர்   கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை                

22.7.2025       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *