கன்வர் யாத்திரையில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணம் காவி உடையில் ஊடுருவிய சமூக விரோதிகளா? சொல்லுகிறார் உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லக்னோ, ஜூலை 21  சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாது காப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிர்சாபூர் ரயில் நிலையத்தில் பயணகச் சீட்டு வாங்குவதில் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 3 கன்வர் யாத்ரீகர்கள் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சாமியார் ஆதித்யநாத் கூறிய தாவது: உற்சாகம் எங்குள் ளதோ, அங்குதான் நம்பிக்கையும், பக்தியும் இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அந்த உற்சாகத்தை கெடுக்கவும், பக்தி மற்றும் நம்பிக்கைக்கு அவப் பெயர் ஏற்படுத்தவும் சில சமூக விரோதிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். காவி உடையணிந்த கன்வர் யாத்ரீகர்கள் சாலைகளிலும், உணவு விடுதிகளிலும் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. சமூக விரோதிகள், கன்வர் யாத்திரையில் ஊடுருவி அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர். அவர்களை கன்வர் யாத்ரீகர்கள் அடையாளம் காட்ட வேண்டும். அவர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள். உங்கள் குழுவில் அவர்கள் நுழைவதை அனுமதிக்காதீர்கள். இது குறித்து நிர்வாகத்திடம் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவ்வாறு சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *