எச்சரிக்கை – எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, ஜூலை 14 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா (வயது 35). ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் ஓட்டுநர் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

சின்னராஜா, கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டங்களில் தோல்வி அடைந்து ரூ.15 லட்சத்துக்கும் மேலாகக் கடனாளியாக மாறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் 2 நாள்களுக்கு முன் மன உளைச்சலில் வீட்டை விட்டு சின்னராஜா வெளியே சென்று விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே உசிலம்பட்டி அருகே சின்னராஜா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *