தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்திறப்பு – நூல் வெளியீடு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஊற்றங்கரை, ஏப். 23- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா மற்றும் ஊற்றங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 35ஆண்டு கால பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அ.தேவராசனுக்கு பாராட்டு விழா கடந்த ஏப்ரல் 20 (20/04/2025) ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் நடைபெற்றது

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் செ.சிவராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊற்றங்கரை பேரூராட்சி தலைவர் பா.அமானுல்லா தலைமை தாங்கினார். தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்களின் படத்தினை திறந்து வைத்து அடிகளாரின் சமூக புரட்சியை நினைவு கூர்ந்து அரிமா.மு.இராசா உரையாற்றினார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்ட “தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்”என்கிற நூலினை ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா வெளியிட முதல் பிரதியினை அரசுப் பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் தணிக்கையாளர் லோகநாதன் சேகர் பெற்றுக் கொண்டார்.அவரை தொடந்து ஊற்றங்கரையின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று நூலினை பெற்றுக் கொண்டனர்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் ஊற்றங்கரை நகரின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்களைப் பாராட்டி வருகிறது. இந்த வரிசையில், ஊற்றங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 35 ஆண்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.தேவராசன் பாராட்டப்பட்டார். தேவராசனுக்கும், அவரது துணைவியார் கவுசல்யாவுக்கும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் உறுப்பினரும், கல்வியாளருமான வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வே. சந்திரசேகரன் பலத்த கரவொலிகளுக்கு இடையே பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .அதை தொடர்ந்து ஊற்றங்கரை நகரின் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்களும் கல்வியாளர்களும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்

நன்கொடை

விடுதலை வாசகர் வட்டத்தின் பணிகளைப் பாராட்டி அ.தேவராசன் குடும்பத்தினர் கவுசல்யா, தினேஷ், சதீஷ், மகிஷா ஆகியோர் விடுதலை வாசகர் வட்டத்திற்கு PODIUM நன்கொடையாக வழங்கினார்கள் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பொருளர் ஆடிட்டர் ந.இராசேந்திரன், வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு, கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் செ. .பொன்முடி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து .இராஜேசன், ஊற்றங்கரை ஒன்றியத்தலைவர் அண்ணா .அப்பாசாமி, ஒன்றிய செயலர் சிவராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.

மனிதம் வெல்லட்டும்

இந்த நிகழ்விற்கு அ.இ.அ.தி.மு..க நகர செயலார் சிக்னல்.ஆறுமுகம் காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன், கிருட்டினகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு..க துணை செயலாளர் பா.சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.இ..கிருஷ்ணமூர்த்தி பாராட்டுரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து “மனிதம் வெல்லட்டும்” என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரையை அரிமா நூருல்லா ஷெரிப் வழங்கினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *