
வாஷிங்டன், மே 24- அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து....... மேலும்
24 மே 2013 16:08:04

ரியாத், மே 24- சவுதி அரேபிய குடிமக்களுக்கு உள்நாட்டு நிறுவனங் களில் 10 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண் டும் என்ற நிடாகட் சட் டத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகப் படுத்தியது. இதனால், சவுதியில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப நேரிட்டுள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி தங் கள் நாட்டில் தங்கி யுள்ள வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,....... மேலும்
24 மே 2013 16:05:04

இஸ்லாமாபாத், மே 23- பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன் றான குவாடர் துறை முகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள் ளது. இங்கிருந்து மேற்கு சீனாவின் துறைமுகங் கள்....... மேலும்
23 மே 2013 16:05:04

அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்
22 மே 2013 15:51:03

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்
22 மே 2013 15:43:03

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்
21 மே 2013 15:27:03

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்
21 மே 2013 15:25:03

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்
21 மே 2013 15:23:03

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்
20 மே 2013 16:05:04

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்
20 மே 2013 15:57:03
மத்திய அரசு இயற்றிய 2009 இலவச கட்டாயக் கல்வி சட்டம் அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத் தக்கது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்றனர் என்றாலும், நகரில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகளில் பயிலும், எளிதில் உணர்ச்சி வயப்படும் மாணவர்களின் கண்ணோட்டம் வேறு பட்ட மனநிலைகளைக் கொண்டதாக இருப்பதாகவே தோன்றுகிறது. குறைந்த அளவு கல்வியறிவு பெற்றிருப்பது, சமூகப் பொருளாதாரப் பாகுபாடு ஆகிய குறைபாடுகளைக் களைவதில் இந்த நடவடிக்கை கொள்கை அளவில் பாராட்டத்தக்கது என்றாலும், நடைமுறைப்படுத்தும் நிலையில் குழப்பங்களும், முரண்பாடுகள் நிலவவே செய்கின்றன. பெரும்பாலான மாண வர்கள் அவர்கள் எங்கள் பள்ளி களில் சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எண்ணி அச்சம் கொள்பவர் களாகவே உள்ளனர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும், ஆசிரியர்களின் பணிச்சுமையை அது கூட்டும் என்றும் ஆண்டாள் வெங்கட சுப்பாரெட்டி சீமாட்டி பள்ளி மாணவர் நவ்நீத் பட்டாட் கருதுகிறார். எங்களுக் கிடையே நிலவக் கூடிய தகவல் பரிமாற்ற இடைவெளி எங்கள் அனைவரையும் பெரிதாகப் பாதிக்கும்; சில நேரங்களில், புதிய மாணவர்களுக்காக ஆசிரியர்கள் சொன்னதையே பல முறை திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கும். நான் ஏற்கெனவே அறிந்திருப்பவைகளை மறுபடியும் கேட்க நான் ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று அவர் கேட் கிறார்.
புதிய மாணவர்களுக்கான கூடுதல் வகுப்புகள், கூடுதல் இருக்கைகள், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப் படுமா? அவைகளுக்கான கூடுதல் செலவை எனது பள்ளி நிர்வாகம் எவ்வாறு சமாளிக்கும்? கூடுதல் கட்டணத்தை எனது பெற்றோரால் அளிக்க முடியுமா? என்பவை அவரை கவலை கொள்ளச் செய்கின்றன. எல்லோரும் எல்லாப் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு பதிலாக அரசு பள்ளிகளைக் கூடுதலாக ஏற்படுத்தவோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கவோ ஏன் அரசு முயலக்கூடாது என்று அவர் கேட்கிறார்.
வேறுவகையான அச்சங்களையும் பி.எஸ்.பள்ளி மாணவர் நாராயணன் போன்றோர் கொண்டுள்ளனர்: எங்கள் பள்ளிக்கு என்று சில கலாச்சாரம் இருக்கிறது. அது போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட மாணவர்கள் மட்டுமே இங்கு வருவார்கள் என்று எண்ணி எங்களை எங்கள் பெற்றோர் இங்கு அனுப்புகிறார்கள். பல்வேறுபட்ட பின்னணி கொண்ட மாணவர்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வது நல்லதுதான். ஆனால் நாங்கள் எப்படி வரவேண்டும் என்று எங்கள் பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அப்படி நாங்கள் வராமல் போகக்கூடும். எடுத்துக்காட்டாக நாங்கள் வீடுகளில் சந்தியாவந்தனம் செய்கிறோம். புலால் உணவை நாங்கள் பள்ளிக்குக் கொண்டு வருவதில்லை. இப்போது உலகை நாங்கள் வேறு விதமாகத்தான் எதிர் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
டக்கத்தில் அனுசரித்துச் செல்வதில் சில பிரச்சினைகள் தோன்ற லாம். ஆனாலும் இரு பிரிவு மாணவர் களுக்கும், ஒருவரின் வாழ்க்கை முறையைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ள இது உதவும். ஆனால் இப்போது எல்லாமே சமப்படுத்தப்பட்டு விடுவதால், கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு முறையை அரசு நீக்கி விடுமா? என்று பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவர் கேட்கிறார்.
இந்த சட்டத்தை வரவேற்கும் சங்கரா பள்ளி மாணவர் கவுசிக் சாமிநாதன், அது நடைமுறைப் படுத்தப்படும் முறையைப் பற்றி கவலை கொள்கிறார். வகுப்பறை யில் அவர்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக ஆங்கிலத்திலும், அடிப் படைக் கணிதத்திலும் புதிய மாணவர் களுக்கு ஓராண்டு பயிற்சி அளிப்பது சரியாக இருக்கும். கல்வியின் தரம் குறைந்து போனால், தற்போதுள்ள மாணவர்கள்தான் இழப்பவர்களாக இருப்பார்கள். புதிய மாணவர்களை இப்பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்துவதை விட, தனியார் பள்ளி ஆசிரியர்களை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுப்பலாம். இதனால் இரு சாராரும் பயனடைவார்கள்; எவருக்கும் இழப்பு ஏற்பாடாது என்று அவர் கூறுகிறார்.
புகழ் பெற்ற பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை அணியும் மேல்ஜாதி, மேல்வருவாய்ப் பிரிவு பின்னணி கொண்ட மாணவர்களை மட்டுமே சேர்ப்பதன் மூலும் பள்ளிகளையே சமூகத்திலிருந்து தனிமைப் படுத்தி விடுகின்றனர் என்று எழுத்தாளரும், சமூக வரலாற்றியலாளரு மான வி.கீதா கூறுகிறார். தங்களைச் சுற்றியுள்ளவைகளைப் பற்றி மட்டுமே மாணவர்கள் கற்றறிந்து கொள்கின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் பலவகையி லானவற்றைக் கற்கும் சூழ்நிலை நிலவுவது இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், குழந்தைகள் பற்றி நம்பிக்கை நிறைந்தவராக அவர், ஒருவருடன் ஒருவர் அனுசரித்துப் பழகும் வழியை இறுதியில் அவர்கள் எப்படியோ கண்டு பிடித்துக் கற்றுக் கொள்கின்றனர் கூறுகிறார்.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்துவதே மேலானது என்று எண்ணும் சில மாண வர்களும் இருக்கின்றனர். மொழிகளை யும், பாடங்களையும் மட்டும் ஒன்றாகப் படிப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு களிலும் அது மாணவர்களை ஈடுபடுத் தும் என்று டான்பாஸ்கோ மாணவர் பகவதி சம்பத் கூறுகிறார்.
எங்கள் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் பல வயதுப் பிரிவுகளில் இருக்கிறார்கள். இப்போது வேறு பட்ட பின்னணியில் இருந்து வரும் மாணவர் கள் இருப்பார்கள் என்று அபாகஸ் மாண்டிசோரி பள்ளி மாணவர் சிறீநிதி மதுசூதனன் கூறுகிறார்.
அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நாங்கள் தொடர்ந்து குறை கூறிக்கொண்டே இருக்கிறோம். எங் களுக்கிடையே இருக்கும் இடை வெளியைக் குறைக்கும் ஒரு வழியாகும் இது. அவர்கள் எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள, நாங்கள் அவர்களிட மிருந்து மேலும் எங்களுக்குத் தெரியாத வைகளை கற்று அறிந்து கொள்வோம் என்று அவர் கூறுகிறார்.(தி ஹிந்து, 14.4.2012)
குறிப்பு: இந்து ஏட்டின் தலைப்பு வேறு விதமானது என்றாலும் - கட்டுரையின் உள்ளாழத்தில் குடி கொண்டிருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தலைப்பு நம்மால் கொடுக்கப்பட்டுள்ளது.