Banner
முன்பு அடுத்து Page:

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சாலை, ரயில், விமானப் பாதை மூலம் இணைக்க சீனா ஒப்பந்தம்

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சாலை, ரயில், விமானப் பாதை மூலம் இணைக்க சீனா ஒப்பந்தம்

இஸ்லாமாபாத், மே 23- பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன் றான குவாடர் துறை முகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள் ளது. இங்கிருந்து மேற்கு சீனாவின் துறைமுகங் கள்....... மேலும்

23 மே 2013 16:05:04

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்

22 மே 2013 15:51:03

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்

22 மே 2013 15:43:03

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்

21 மே 2013 15:27:03

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்

21 மே 2013 15:25:03

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்

21 மே 2013 15:23:03

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்

20 மே 2013 16:05:04

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்

20 மே 2013 15:57:03

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்

20 மே 2013 15:56:03

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்

19 மே 2013 14:57:02

திருவிழாச் செய்திகளும் சமூகமும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

சென்ற மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பித்து சில நாட்களுக்கு முன் தான் முடிந்திருக்கிறது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பித்து இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இனிமேல்தான் முழு ஆண்டுத் தேர்வுகள் நடக்க இருக் கின்றன.  படிக்கும் மாணவ மாணவி களைப் பாதிக்கும் வகையிலே ஒலி பெருக்கிகள் ஊர் தோறும் அலறிக் கொண்டிருக்கின்றன. மாதந்தோறும் பண்டிகைகளும், திரு விழாக்களும் தமிழர்களின் மானத்தையும், பணத்தையும் அழித்தாலும் இந்த்ப் பங்குனியில் வரும் உத்திரமும் பொங்கலும் ஆங்கிலத்தில் கொஞ்சம் ஓவரா இல்லே என்று சொல்லுவார்களே, அதனைப் போலவே கொஞ்சம் ஓவராகவே தமிழர் களின் மானத்தையும், உழைப்பினால் கிடைத்த பொருளையும் வாங்கும் திரு விழாக்களாக இருக்கின்றன. காளி யம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், இப்படி பல்வேறு பெயர்களில், அதனைப் போலவே பங்குனி உத்திரம், கொடை, பங்குனிப் பொங்கல் என்று பங்குனி மாதத்தில் வரும் செவ்வாய், புதன், வியாழன், சில ஊர்களில் வெள்ளி தொடங்கி என்று இந்தத் திருவிழாக்கள் நடக்கின்றன. நம்மைப் போன்ற சமுதாய நலன் இயக்கங்கள் ஆயிரம் முறை அனுமதி வாங்கியதை உறுதி படுத்திக் கொண்டு பின்பு 10 மணிக்குள் முடிக்க வேண்டு மென்றால் நமது பேச்சாளர்களிடம் கையைக் காட்டி, கடிகாரத்தைக் காட்டி, மைக் செட்டுக்காரரைக் காட்டி எவ்வளவு முக்கியமான பிரச்சனையாக இருந் தாலும், சுருங்கச்சொல்லி விளங்க வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்து கூட்டத்தை முடிக்கின்றோம். ஆனால் திருவிழா என்று சொல்லி நீங்கள் நடத் தினால்,10 மணிக்குள்ளா, தேவையே இல்லை, விடிய விடிய நீங்கள் நடத்தலாம்,.  நடக்கும் பாதையை மறிக்கலாம், நோயாளி படுத்திருக்கும் வீட்டிற்கு நேரே மைக்கைக் கட்டி விடிய விடிய கத்த விடலாம், ஆபாசக் குத்தாட்டத்தை ஏற்பாடு செய்யலாம், நடு இரவில் சாமி ஊர்வலம் என்று சொல்லி காது வெடிக்கும் அளவுக்கு பட்டாசுகளைக் கொளுத்தலாம்  ஏனென்றால் இது பக்தி சம்பந்தப்பட்ட விசயம், யாரும் தடுக்கக் கூடாது, போலீஸ் வரலாம், ஆனால் கேள்வி கேட்கக்கூடாது, எந்த கண்டிசனும் போடக்கூடாது.இதுதான் இன்றைய தமிழகத்தின்  நிலை.  ஒரு கல்லை அம்மன் என்று சொல்லி தூக்கி வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துகள் பார்க்க சகிக்கவில்லை நம்மால். இவ்வாறு நான் சொன்னவுடன் `பக்த கோடிகள் சிலர் வருத்தப்படக்கூடும். சனிக்கிழமை (7.4.2012) தினத்தந்தி (மதுரை) நாளிதழில் வந்த செய்திகள் சிலவற்றைத் துணைக்கு வைத்துக்கொள் கின்றேன். முதல் செய்தி கெங்குவார்பட்டி கோவில் திருவிழாவில் போலீஸ் இன்ஸ் பெக்டர் மீது தாக்குதல் ( பக்கம் 8).

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் முத்தாலம் மன் கோவில் உள்ளது, இக்கோவிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வரு கிறது.  மஞ்சள் நீராட்டத்தின்போது ஒரு சிலர் தப்பு மேளம் அடித்தபடி வந்தனர். உடனே அந்தப்பிரிவை சேர்ந்த மற்ற வர்கள் கரகம் எடுத்து வருபவர்கள் மட் டுமே ஆடிவர வேண்டும் என எச்சரித் தனர். அதனால் அந்தப்பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது, இதனை அடுத்து காவலர் அங்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர். அப்போது கூட்டத் தில் நின்ற சிலர் கற்களை வீசினார்கள் . அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜன் ஆகியோர் தலை மற்றும் கைகளில் கற்கள் தாக்கி காயம் அடைந்தனர் இதன் காரணமாக கெங்குவார்பட்டியில் பதற்ற மான சூழ்நிலை நிலவுகிறது முத்தாலம் மன் திருவிழாவால் ஊரில் கோஷ்டி கலாட்டா, மண்டை உடைப்பு , கைது எல்லாம் யார் உபயம் எல்லாம் அந்த ஆத்தா முத்தாலம்மன் உபயம்தான் ஒரு பகுதியில் திருவிழா நடத்துகின்றார்கள் என்றால் காரியக்காரர்கள் சிலர் களத் தில் - பண வசூலில் இறங்கிவிடுகின் றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வரி. இது சட்டம் போல, கட்டாயம் கட்ட வேண்டும், ஆயரமாயிரமா வசூலித்து என்ன நிகழ்ச்சி? குடிக்க நல்ல  தண்ணிர் இல்லை குளம் வெட்டப்  போகின் றார்களா? ஊரில் உள்ள பெரிசுகள் பலருக்கு குடிக்க கஞ்சி ஊற்ற நாதி யில்லை, ஊர்ப் பொதுவிலிருந்து ஊற்றப் போகின்றார்களா? என்னதான் பண் றாங்க பணத்தை வசூல் பண்ணி? சரி ஒருத்தருக்கும் கொடுக்க விருப்பமில்லை, ஓஞ்சாமியுமாச்சு, ஓந் திருவிழாவுமாச்சு, நான் ஆட்டைக்கு வரலைன்னு சொல்லி  வரியைக் கொடுக்கவில்லையென்றால் என்ன செய்வார்கள் ?

இதோ  அடுத்த செய்தி புதுக் கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி தாலுகா கரையான்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது எங்கள் கிராமத்தில் பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 13ஆம் தேதி திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி கிராமிய ஆடல் ,பாடல் பல்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச பாலியல் வக்கிர நடனத்தை நடத்த விழா கமிட்டியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு வரி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், இதற்கு நாங்கள் மறுத் தோம். இதனால் பழனியாண்டி மகன் சின்னாண்டி தலைமையில் கட்டப் பஞ்சாயத்துக்கூடி என்னையும், எனது தந்தை பழனிக்கண்ணு , எனது உறவினர் ராஜா ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் , எங்களுடன் ஊரில் உள்ள வேறு யாரும் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். (பக்கம் 26). வரி கொடுக்கணும், வரி கொடுக்கலைன்னா ஊரை விட்டு ஒதுக்கி வைப்பாங்களாம்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்