Banner
முன்பு அடுத்து Page:

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்

20 மே 2013 16:05:04

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்

20 மே 2013 15:57:03

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்

20 மே 2013 15:56:03

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்

19 மே 2013 14:57:02

சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு

சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு

நியூயார்க், மே 19- அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத் திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவார்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கிச் சென்று நின்றுவிட்டதால்,....... மேலும்

19 மே 2013 14:56:02

அமெரிக்காவில் ரயில்கள் மோதல்: 60 பேர் காயம்

அமெரிக்காவில் ரயில்கள் மோதல்: 60 பேர் காயம்

நியூயார்க், மே 19- அமெ ரிக்காவின் நியூயார்க் புற நகர் பகுதியில் வெள்ளிக் கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் 60 பேர் காய மடைந்தனர். நியூ ஹேவனிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கனெக்டிக்ட் என்ற இடத் தில் திடீரென தடம் புரண்டு, எதிர் திசையில் மற்றொரு ரயில் பாதை யில் வந்த பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 60 பயணிகள் காயமடைந்தனர். அவர் களில் 5 பேரின் உடல்....... மேலும்

19 மே 2013 14:51:02

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

டாக்கா, மே. 18- வங்க கடலில் உருவான மகா சேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடு களை நோக்கி நகர்ந்தது. அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்ட காங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டது. அப்போது சிட் டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேரு டன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்....... மேலும்

18 மே 2013 18:31:06

பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான், மே 18- பாகிஸ்தான் சிறையிலி ருந்த 51 இந்திய மீனவர் களை நல்லெண்ண அடிப் படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: "பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்களை விடுவிக்க இடைக்கால அரசின் பிர தமர் மிர் ஹஸர் கான் கோசோ நடவடிக்கை....... மேலும்

18 மே 2013 18:31:06

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி

பாக்தாத், மே 18- ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம் களுக்குமிடையே அடிக் கடி மோதல் நடந்து வரு கிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங் களைக் குறிவைத்து வெடி குண்டு  தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களைப் பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் பாக் தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம் களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து....... மேலும்

18 மே 2013 18:30:06

மகாசேன் புயல் வங்காளதேசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்: வீடுகள் சேதம்; 5 பேர் பலி

மகாசேன் புயல் வங்காளதேசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்: வீடுகள் சேதம்; 5 பேர் பலி

சிட்டகாங், மே 17-  மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் பெரிய அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக் கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 5 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி....... மேலும்

17 மே 2013 16:24:04

பாகிஸ்தானுக்கு ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 9- மும்பை தாக்குதலில் முதன்மை சதிகாரனான ஹபீஸ் சயீத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை ஹிலாரி கிளிண்டன் வலியுறுத் தினார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமெ ரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண் டன் நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத் தினார். இந்த பேச்சு வார்த் தையைத் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம் பர் 26ஆம் தேதி தீவிர வாதிகள் நடத்திய தாக் குதலில் முதன்மை சதி காரன் ஹபீஸ் சயீத் (லஸ்கர்-இ-தொய்பா தலைவன்) என அமெ ரிக்கா நம்புகிறது. மும்பை தாக்குதலில் தொடர்பு டைய சயீத் உள்ளிட்ட சதிகாரர்களை பாகிஸ் தான் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

இத்தகைய தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ் தானை களமாக பயன் படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சயீத் தலைக்கு அமெ ரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.50 கோடி) விலை அறிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்ப தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படு வோம் என்பதை உலகத் துக்கு தெரிவிக்க விரும் பித்தான் இந்த ஹபீஸ் தலைக்கு விலை அறிவித் தோம்.

தீவிரவாதம் அமெ ரிக்காவை மட்டுமல்ல, எல்லோரையும் பாதிப் புக்கு உள்ளாக்குகிறது. தீவிரவாதிகளை சட்டத் தின் முன் கொண்டு நிறுத் துவதில் அமெரிக்கா வின் தீவிரத்தையும் சயீத் தலைக்கு விலை நிர்ண யித்தது எடுத்துக் காட்டும்.

அமெரிக்கா, ஆப்கா னிஸ்தான் மற்றும் நேச நாடுகளில் தாக்குதல்கள் நடத்தியவர்களை துரத் திச்செல்வதில் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.

தீவிரவாதத்தை கட் டுப்படுத்துவதில் பாகிஸ் தானிடமிருந்து இன்னும் அதிகம் அதிகமாக எதிர் பார்க்கிறோம்.

தனது நாட்டை தீவிர வாதிகள் அதிகளவில் பயன்படுத்துவதை பாகிஸ் தான் தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தீவிரவாத தாக்குதல்க ளில் பிற எந்த நாட்டை யும் விட பாகிஸ்தானில் 35 ஆயிரம் பேர் கொல் லப்பட்டுள்ளனர். இதை பாகிஸ்தான் உணர வேண்டும். - இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்