Banner
முன்பு அடுத்து Page:

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சாலை, ரயில், விமானப் பாதை மூலம் இணைக்க சீனா ஒப்பந்தம்

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சாலை, ரயில், விமானப் பாதை மூலம் இணைக்க சீனா ஒப்பந்தம்

இஸ்லாமாபாத், மே 23- பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன் றான குவாடர் துறை முகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள் ளது. இங்கிருந்து மேற்கு சீனாவின் துறைமுகங் கள்....... மேலும்

23 மே 2013 16:05:04

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்

22 மே 2013 15:51:03

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்

22 மே 2013 15:43:03

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்

21 மே 2013 15:27:03

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்

21 மே 2013 15:25:03

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்

21 மே 2013 15:23:03

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்

20 மே 2013 16:05:04

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்

20 மே 2013 15:57:03

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்

20 மே 2013 15:56:03

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்

19 மே 2013 14:57:02

அமெரிக்காவில் இரண்டாவது இந்தியர் மர்ம மரணம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஏப். 26- அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்த காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த நிகில் கர்ணம் என்ற 28 வயது இளைஞர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து கடந்த 21ஆம் தேதி முதல் துர்நாற்றம் வருவதாக அருகில் வசிப்போர் காவல்துறையில் புகார் செய்தனர். அதன்பேரில் அவரது வீடு சோதனையிடப்பட்டது. இதில் கர்ணம் 10 தினங்களுக்கு முன்னரே இறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வடக்கு அமெரிக்காவில் உளள தெலுங்கு அசோசியேஷனுக்கு தகவல் அளிக்கப் பட்டது. அசோசியேஷன் தலைவர் தெட்ட குரா கூறுகையில் கர்ணம் இறப்பு குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். காவல்துறையினர் கொலை மற்றும் தற் கொலை என்று எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் மருத்துவ பரிசோதனையின்போது அதன் விபரம் தெரிய வரும் என கூறினார். கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் இறந்த இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 19ஆம் தேதி போஸ்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்த சேஷாத்திரி ராவ் என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஓட்டுனர் 300 பேருக்கு தடை

பீஜிங், ஏப். 26- சீனாவில், போக்குவரத்து விதி முறையை பல முறை மீறிய, 300 ஓட்டுனர்களுக்கு வாழ்நாள் முழுக்க வாகனங்களை இயக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில், 50 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இயங்குகின்றன. போக்கு வரத்து விதிமுறையை அடிக்கடி மீறினால், அவர்கள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்க வழி செய்யும் சட்டம், சீனாவில் கடந்த 2004இல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இதுவரை 300 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்