Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அஞ்சல் துறை அலுவலகங்களில் உள்ள 6 பிரிவுகளிலான போஸ்டல் அஸிஸ்டெண்ட் காலி இடங்கள் 618-அய் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் துறையில் போஸ்டல் அஸிஸ்டெண்ட், சார்டிங் அஸிஸ்டெண்ட், போஸ்டல் அஸிஸ்டெண்ட் - பாரின் போஸ்ட், மெயில் மோட்டார் சர்வீஸ், ரிடர்ண்டு லெட்டர் ஆபிஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் மேற்கண்ட காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் தமிழத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள காலி இடங்களாகும்.

தமிழ் நாடு போஸ்டல் சர்வீசின் போஸ்டல் அஸிஸ் டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். மெட்ரிக் அளவிலான படிப்பில் இந்தியைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழியை நன்றாகப் பேசும், எழுதும் மற்றும் வாசிக்கும் திறமையும் தேவைப்படும்.

தமிழக அஞ்சல் துறையின் அஞ்சலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-அய்க் கட்டணமாக செலுத்த வேண்டும். முதலில் ரூ.50/- கொடுத்து விண்ணப்பங்களை தலைமைத் அஞ்சல் நிலையங்கள் மற்றும் தெரிவு செய்த சில அஞ்சல் நிலையங்களிலிருந்து பெற வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு இந்தியா போஸ்ட்' வாயிலாக பதிவுத் அஞ்சல் அல்லது விரைவுத் அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி: Direct Recruitment Cell,New Delhi HO, New Delhi 110 001.

விண்ணப்பம் வாங்க இறுதி நாள் : 25.09.2012 விண்ணப்பிக்க இறுதி நாள் : 01.10.2012

இணையதள முகவரி: http://tamilnadupost.nic.in/rec/DoP_TN_DR2012.jpg



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்