
சென்னை, ஜூலை 20 - தமிழகத்தில் காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் உள்ள 13,320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 24 ஆம் தேதி சுமார் 3 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். அந்த தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்