Banner

இளைஞர்

இந்தியாவில் அரசுத் துறை சார்ந்த பணிகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யூ.பி.எஸ்.சி., அமைப்பு நடத்துவது நாடு அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பாதுகாப்பு படைகள் - பணியிடத் தேர்வு எனப்படும் சி.டி.எஸ்., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு அடிப்படையில் இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, நேவல் அகாடமி, ஏர் போர்ஸ் அகாடமி போன்ற இடங்களி லுள்ள காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்தியப் பாதுகாப்புப் படையில் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை என்ற முக்கிய மூன்று படைகளுடன் பாரா-மிலிட்டரி போர்ஸ் எனப்படும் கோஸ்ட் கார்டு, அஸ்ஸாம் ரைபிள்ஸ், ஸ்பெஷல் பிரான்டியர் போர்ஸ் என்ற படைகளும் உள்ளன. இந்தப் படைகளின் முக்கிய பணி இடங்களுக்காகத்தான் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

எதற்கு பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்

மன உறுதி மற்றும் தைரியம் உள்ளவர்களுக்கும், இந்திய தேசத்தின் மீது அபாரமான பற்று உடைய வர்களுக்கும், வாழ்வில் வரும் சவால்களை தைரியமாக எதிர்கொள்பவர்களுக்கும், தங்கள் வாழ்க்கையையே இந்தத் தேசத்திற்காக அர்ப்பணிக்கும் உயர்ந்த கொள்கை உடையவர்களுக்கும் பாதுகாப்புப் பணியே சிறந்த தேர்வாக இருக்கும்.

வரும் 2015-க்குள் இந்தியா சர்வ தேச அளவில் மிக முக்கியமான நான்காவது நாடாக மாறும் என்றும், இந்தியாவில் பாதுகாப்புக்காக உபயோகிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை தர அடிப்படையிலும், கொள்ளளவிலும் புதிய உச்சங்களை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில் நுட்ப ரீதியிலும் இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் பன்னாட்டு முக்கியத்துவத்தைப் பெறும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

தகுதிகள் என்ன வேண்டும்

இந்தியன் மிலிடரி அகாடமி மற்றும் ஆபிஸர்ஸ் டிரெய்னிங் அகாடமி பணி இடங்களுக்கு சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 24/25-க்குள் இருக்கவேண்டும்.

நேவல் அகாடமியின் காலி இடங்களில் நுழைய இயற்பியல் மற்றும் கணிதத்தில் பட்டப் படிப்பு அல்லது பொறியியல் பட்டப் படிப்பு தேவை. வயது 19 முதல் 22- க்குள் இருக்க வேண்டும். ஏர்போர்ஸ் அகாடமியின் பதவிக்கு இயற்பியல் மற்றும் கணிதத்தை பிளஸ்2 அளவில் படித்திருப்பதோடு பட்டப்படிப்பு அல்லது பொறியியல் பட்டப் படிப்பு தேவைப்படும். வயது 19 முதல் 23க்குள் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு எப்படி இருக்கும்

இந்தியன் மிலிட்டரி அகாடமி, நேவல் அகாடமி மற்றும் ஏர்போர்ஸ் அகாடமி ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகையில் இருக்கும். எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். சர்வீஸஸ் செலக்சன் போர்டு எனப்படும் எஸ்.எஸ்.பி.,யினால் இந்த நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. இதிலும் வெற்றிகர மாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி மற்றும் திறனறியும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதிலும் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித் திருக்கும் பிரிவுக்கு ஏற்றபடி ஓரியண்டேஷன் பயிற்சி தொடங்குகிறது.

எப்படி விண்ணப்பிப்பது

பொதுவாக இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்படும். இவற்றுக்கான தேர்வுகள் முறையே செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படுகிறது. விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விபரங்களை யூ.பி.எஸ்.சி., அமைப்பு முக்கிய நாளிதழ்களில் மே, ஜூன், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வெளியிடும். குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி இதற்காக பரிந்துரைக்கப்படும் இடங்களில் இருந்து விண்ணப் பங்களைப் பெற வேண்டும். விண்ணப்பங்களை புது டில்லிக்கு அனுப்பவேண்டும். நாட்டின் மீது பற்றுக் கொண்ட இளைஞர்களை வரவேற்க இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்கின்றன. நீங்கள் தயாரா?

இந்தியாவில் தற்போது படித்துவருபவர்களிடையே பெரும் புகழ் பெற்றிருப்பது அய்.டி., எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறைதான். பொறியியல் சார்ந்த இதர துறைகள் இதற்கு அடுத்த இடம் பிடிக்கின்றன. தொழில் நுட்பம் சார்ந்த படிப்பு என்பதுடன் சமூகத்தில் இந்தத் துறைகளுக்கு இருக்கும் மரியாதை, உலக நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு, கணிசமான சம்பளம், மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக இந்தப் படிப்புகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

சமூக தளத்தில் இருந்து பார்க்கும் போது இது நியாயமான எதிர்பார்ப்புதான். ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எண்ணுவதுதான் முறையான ஒன்றாக இருக்க முடியும். இதற்கான பயிற்சிகளை படிக்கும் காலத்தில் போதுமான அளவில் மேற்கொண்டு தற்போது நிலவும் கடும் போட்டிகளுக்கு நடுவே இளைஞர் பட்டாளம் தங்கள் மனதிற்குப் பிடித்த தொழில் நுட்ப படிப்புகளையும் இதர படிப்புகளையும் மேற்கொள் கிறார்கள். பட்டப் படிப்பை முழுமையாகவும், நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்.

இதன் பின்னர் கேம்பஸ், ஆப்-கேம்பஸ் என்ற முறைகளிலும், போட்டித் தேர்வுகள் எழுதியும் தங்களுக்கான பணியைப் பெறுகிறார்கள். இதுவரை எல்லாம் சுகம்தான். நிறுவனத்தில் இவர்கள் இணைந்த பின்னர்தான் சோதனைகள் துவங்குகிறது. ஏனென்றால் நிறுவனங்கள் என்பவை தனி மனித உழைப்பினால் மட்டும் உயர்பவை அல்ல. கடும் உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய தொடர் முயற்சிகள் ஆகியவற்றுடன் குழுவாகப் பணியாற்றும் தன்மையுடன் அவை தொடர்ந்து இயங்கினால் மட்டுமே எட்டிய இலக்குகளை இருத்தி வைத்துக் கொள்ள முடியும்.

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற எண்ணெய் நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.பி.சி.எல்., நிறுவனமும் ஒன்று. இந்த நிறு வனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மய்யத்தில் ஜெனரல் ஒர்க்மேன் - பி பிரிவில் உள்ள 45 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இவற்றில் 20 இடங்கள் கெமிக்கல் பிரிவிலும், 19 இடங்கள் மெக்கானிகல் பிரிவிலும், 3 இடங்கள் எலக்ட்ரிகல் பிரிவிலும், இன்ஸ்ட்ருமென் டேஷன் பிரிவில் 3 இடங்கள் என்ற அடிப்படையில் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.பி.சி.எல்., நிறுவனத்தின் ஜெனரல் ஒர்க்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.03.2013 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக கெமிக்கல், மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ மாதிரியில் தங்கள் விண்ணப்பங்களை நிரப்பி, உரிய சான்றிதழ் ஆவணங்களின் நகல்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி: Senior Manager (Recruitment & Promotion ), BPCL & Kochi refinery, PB NO 2, Ambalamugal, Kochi - 682 302

விண்ணப்பிக்க இறுதி நாள் : 22.04.2013

முதல் கட்ட எழுத்துத் தேர் வை எதிர்கொண்டு வெற்றி கரமாகத் தேர்ச்சி பெற்றுவிட் டோம். அடுத்து நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நேர்காணலும் போட்டியாளரின் துறை சார்ந்த திறன், தகவல் பரிமாற்றத் திறன், பிறருடன் ஒத்திசைந்து பணியாற்றும் மனித வள திறன்கள், ஆளுமைக் குணம் போன்ற பல்வேறு திறமைகளை அடையாளம் காண உதவுகின்றன. நாம் இதுவரை நேர்காணல் குறித்த இதர அம்சங்களை கடந்த இதழ்களில் பார்த்தோம். இப்போது நேர்காணலில் போட்டியாளரிடம் எதிர்பார்க்கப்படும் முக்கியமான மனித வளத் தகுதிகள் குறித்து பார்ப்போம்.

இந்த குணங்கள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் அவற்றை மேன்மைப்படுத்திக் கொள்வது, இல் லாத பட்சத்தில் அவற்றை ஏற்படுத்திக் கொள்ள தீவீர மாக முனைவது என்பதே நம்மைப் பற்றி நமது பணி வாய்ப்பாளரிடம் ஒரு அழுத்தமான பதிவை ஏற்படுத்தி நமது வேலை வாய்ப்பை உத்திரவாதம் செய்யும் என்பதை கவனத்தில் வைக்கவும்.

எப்பொழுதும் தயாராக இருத்தல்

உங்கள் பணி தேடலின் போது செய்யப்பட வேண்டிய மிக மிக முக்கியமான விஷயம் இதுதான். ஆனால் வெகு சில போட்டியாளர்கள் மட்டுமே இத னைச் செய்கிறார்கள். இதனாலேயே அவர் களின் பணி வாய்ப்புக்கான உத்திரவாதமும் கிடைக் கிறது. நீங்கள் இணைந்து பணி புரிய இருக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்லுங்கள்.

அந்த நிறுவனத்தைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் இணையதளத்திலிருந்து அறி யுங்கள். சில மணி நேரங்கள் இதற்காக செல விடப்படுவது கட்டாயம் தேவைப்படும். அதே போல் விக்கிபீடியாவில் அந்த நிறுவனம் குறித்த தகவல்களை அறியுங்கள். நிறுவனத்தின் தற் போதைய நிலை, அங்கிருக்கும் நிறுவன சூழல், நிறுவனத்தின் தற்போதைய முனைப்புகள் போன்றவற்றை அறிவது நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். ஒரு வேளை நீங்கள் இணைந்து பணியாற்ற இருக்கும் நபரை நீங்கள் அறி வீர்கள் என்றால் லிங்க்டுஇன் மூலமாக அவரைப்பற்றியும் அறிய வேண்டும்.

உங்களைப் பற்றி  எடுத்துச் சொல்லுங்கள்

நேர்காணலில் உங்களைப் பற்றி சிறந்த முறையில் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகள் அந்த வேலைக்கு நீங்கள் முற்றிலும் தகுதி படைத்தவர்கள் என்று எண்ணத் தோன்றும் விதத்தில் இருக்க வேண்டும். உங்கள் திறமைகள், அனுபவம் போன்றவை குறிப்பிட்ட வேலைக்கு எப்படி உபயோகமாக இருக்கும் என்பதை சொல் லுங்கள். நீங்கள் ஒரு சிறந்த குழு உறுப்பினராக இருப்பீர்கள் என்பதையும், உங்கள் நேர்மறை சிந்தனைகள் நிறுவனத்தை எப்படி வளர்க்க முடியும் என்பதையும் நேர்காணலில் சொல்லுங்கள். நேர்மறை சிந்தனை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்ற இரண்டு குணங்கள்தான் நேர்காணலில் எதிர்பார்க்கப்படும் முக்கியமான இரண்டு குணங்கள்.

நேரத்திற்கு சென்று விடுங்கள்

ஒரு நேர்காணலுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே சென்று விடுவதை உத்திரவாதம் செய்யுங்கள். போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களை சொல்லி நேரத்திற்கு செல்லாமல் இருப்பது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். கூகுள் மேப்ஸ் உபயோகித்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பாதை, போக்குவரத்தின் தன்மை, வண்டிகளை நிறுத்துவதற்கான தகவல்கள் போன்றவற்றை அறிய முடியும்.

மிகவும் முன்னரே செல்ல வேண்டாம்

நேர்காணல் நேரத்திற்கு 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக அந்த இடத்தில் இருந்தால் போதுமானது. ஏனென்றால் நேரத்தின் மதிப்பை நமது பணி வாய்ப்பாளர் நன்றாக அறிவார். மேலும், அவர்கள் நேர்காணலுக்கான தயாரிப்புகளில் இருக்கும் போது நமது முன்னர் கூட்டிய வருகை அவர்களுக்கு இடைஞ்சலாக மாறிவிடக் கூடாது. ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்திற்கு வெகு சீக்கிர மாக நீங்கள் இடத்தை அடைந்து விட்டால் அருகில் எங்கு சென்று நேரத்தை செலவிடுவது என்பதை திட்டமிடுங்கள்.

உடைகள் முக்கியம்

நேர்காணலுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. சுத்தமான, அயர்ன் செய்யப்பட்ட ஆடை யை அணிவது, தலைமுடியை ஒப்புக் கொள்ளும் ஸ்டைலில் இருப்பதை உறுதிசெய்வது, நேர் காணல் நாள் அன்று தலைக்கு குளித்து செல்வது போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல் லலாம்.

பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்

ஒவ்வொரு நேர்காணலிலும் பொதுவான சில கேள்விகள் கேட்கப்படும். இவை வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்தான். இவற்றிற்கு பதில் சொல்வதில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நியாயமற்ற போலியான பதில்களைத் தருவது எதிர்மறை விளைவு களைத்தான் உருவாக்கும். எனவே வெளிப் படையான மற்றும் ஊக்கதிறனை வெளிப்படுத்தும் பதில்களே சிறந்தது. உங்களைப் பற்றி, உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி, உங்கள் சந்தேகங்கள் பற்றி சரியான விதத்தில் பதில் சொல்ல பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கான கேள்விகளை தயாரியுங்கள்

சில நேர்காணல்களில் உங்களுக்கு பணி வாய்ப்பாளரிடம் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அப்போது எவ்வளவு சம்பளம், பணி புரியும் நேரம், மாறுதல் கிடைக்குமா என்பது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவற்றை விட்டு வேலையில் சவால்கள் இருக்குமா, நிறுவனத்திற்கு தற்போது என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற நேர்மறை கேள்விகளையே கேட்க வேண்டும். இந்த குணங்களை வளர்த்துக் கொள் ளுங்கள். நேர்காணலை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும், நேர்மையாகவும் எதிர்கொள் ளுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்குத்தான்.

தூர்தர்சன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகிய மத்திய அரசுத் துறை அமைப்புகளில் புரொகிராம் எக்சி கியூடிவ் மற்றும் டிரான்ஸ்மிசன் எக்சிகியூடிவ் ஆகிய 2 பணிகளுக்கான 1238 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  எஸ்.எஸ்.சி., என்னும் மத்திய அரசு ஊழியர் தேர் வாணையம் இந்த 2 பணிகளுக்கான வாய்ப்பை அறிவித்துள்ளது.  1.1.2013 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

புரொகிராம் எக்சிகியூடிவ்: *எம்.ஏ.,எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக நாடகம்/இலக்கியம்/கலை தொடர்பான சிறப்புத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது எடிட்டிங்/ஆக்டிங்/ஆர்ட் டைரக்சன்/புரடக்சன் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். *மொழித் திறன் பெற்றிருப்பதும் அவசியம். *எம்.பி.ஏ., கம்ப்யூட்டர் திறன்கள் பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

டிரான்ஸ்மிசன் எக்சிகியூடிவ்: *வெவ்வேறு திறன்களைப் பெற்றிருப் பவருக்கான பணி இது என்பதால் அதற்கேற்ப தகுதிகளும் மாறும். மேலும் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய

முழு விவரங்களை தெரிந்து கொள்ள:   www.prasarbharati. gov.in

அண்மைச் செயல்பாடுகள்