Banner

மகளிர்

அலுவலகத்துல போய் உக்காந்து எழுந்து வர்றதுல விருப்பமில்லை. ஏதாவது சவாலான வேலையை செய்யணும்னு நினைச்சேன்... என்கிற சாரதா,  தினம் 40 தென்னை மரங்கள் ஏறி இறங்குகிறார்.

சரசரவென நான்கே பாய்ச்சலில் நீண்டு வளர்ந்த தென்னை மரத்தின் உச்சியைத் தொட்டு நிற்கிறார் சாரதா. இரு தோள்களிலும் இரண்டு பைகள் வேறு.  சர்வசாதாரணமாக மட்டையைப் பிடித்து ஜம்ப் செய்து மேலேறி உச்சியில் நின்று வேலையைத் தொடங்குகிறார். அண்ணாந்துப் பார்த்தாலே நமக்குத்  தலை சுற்றுகிறது. ஆண்களே திக்கித் திணறும் நிலையில், தினம் தினம் தென்னை மரங்கள் ஏறி இறங்குகிறார் சாரதா.

இந்தியாவிலேயே அதிக பரப்பளவில் (790 ஹெக்டேர்) தென்னை மரங்களைக் கொண்ட மாநிலம் கேரளா. தென்னை உற்பத்தியை இன்னும்  அதிகரித்து சாகு படியாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கச் செய்யும் நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை  மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்று தான், புதிய வீரிய ரக தென்னை மர உருவாக்கம். மிகவும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் செய்யவேண்டிய  கடினமான இப்பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகிறார்கள்.

அவற்றில் ஒருவர்தான் மகரந்தச் சேர்க்கையாளர் -சாரதா. காசர் கோட்டை ஒட்டியுள்ள குத்திக்கோல் கிராமத்தைச் சேர்ந்த சாரதாவுக்கு திருமணமாகி 2  குழந்தைகள் உண்டு. கணவர் கொத்த னார். தைரியமும் ஆர்வமும் இருந்தா யாரு வேணும்னாலும் எந்த வேலையையும் செய் யலாம். எல்லா  வகையிலயும் தென்னை எங்க வாழ்க்கையோட கலந்திருக்கு.

தென்னை மரத்துல தேங்காய் வெட்ட, மரம் சுத்தம் செய்யன்னு ஏகப் பட்ட வேலைகள் இருக்கும். ஆனா, ஆட்கள் கிடைக்கிறது சிரமமா இருக்கும்.  தென்னை மரம் ஏறுறது ஆண் களுக்கான வேலைன்னு ஒரு இலக்கணம் இருக்கு. அதை சிறீமேனி ஜோசப்னு ஒரு விவசாயி தகர்த்துட்டாரு. எளிமையா  தென்னை மரம் ஏறுற ஒரு மிஷினை கண்டுபிடிச்ச பிறகு ஆண், பெண் பேதமெல்லாம் காணாமப் போயிருச்சு. நான் டிகிரி முடிச்சவுடனே திருமணம்  முடிஞ்சிடுச்சு.

குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு ஏதாவது வேலைக்குப் போகலாமேன்னு தோணுச்சு. அலுவலகத்துல போய் உக்காந்து எழுந்து வர்றதுல  விருப்ப மில்லை. ஏதாவது சவாலான வேலையை செய்யணும்னு நினைச்சேன். கொச்சியில இருக்கிற தென்னை வளர்ச்சி வாரியம் ஒவ் வொரு  மாவட்டத்துலயும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் கோக்கனட்ஸ் அமைப்பை ஆரம்பிச்சாங்க. அந்த அமைப்புல இருந்து கேரள மாநில வேளாண் அறிவியல்  நிலையம் மூலமா தென்னை மரம் ஏற பயிற்சி கொடுக்கிறதா விளம்பரம் வந்திச்சு.

பயிற்சிக்குப் போறேன்னு கணவர் கிட்ட சொன்னேன். முதல்ல அவர் உன் னால அதெல்லாம் முடியாது. கடினமான வேலைன்னு சொன்னார். முயற்சி  பண்ணிப் பாக்குறேன்னு சொல்லிட்டு, ஏதோ ஒரு துணிச்சல்ல பயிற்சிக்குப் போனேன். போன பிறகுதான் தப்பா முடிவெடுத்துட்டோம்னு தோணுச்சு.  மரத்தை அண்ணாந்து பாக்கும்போதே பயமா இருந்துச்சு. ஆனா, பாதுகாப்பு ஏற்பாடுகளோட ஏறினா எந்த பாதகமும் வராதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.  ரொம்பவும் எளிமையா பழகிடுச்சு.

ஒரே மாசத்துல எவ்வளவு பெரிய மரத்தையும் ஏறக் கத்துக்கிட்டேன். பயிற்சி முடிச்சதும் பயங்கர பிஸி. தேங்காய் வெட்ட, மரம் சுத்தம் பண்ண,  மட்டை வெட்டிப்போடன்னு தினமும் வேலை யிருக்கும். நல்ல வருமானமும் கிடைச்சுச்சு. இப்போ  பண்ணைப் பயிர் ஆராய்ச்சி நிலையத்துல  பாலினேஷன் வேலையை ஒப்பந்த அடிப்படையில செய்றேன்... என் கிறார் சாரதா. சாரதாவோடு கிருஷ்ண வேணி, பிந்து ஆகியோரும் மகரந்தச்  சேர்க்கையாளர்களாக வேலை செய்கிறார்கள்.

கிருஷ்ணவேணி காசர்கோடு பை வலிக்கா கிராமத்தைச் சேர்ந்தவர். 24 வயதுதான். இன்னும் திருமணம் ஆக வில்லை. பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்.  முதல்ல ஹார்ட்வேர் கடையில வேலை செஞ்சேன். விளம்பரம் பாத்துட்டுதான் நானும் போனேன். தென்னை மரம் ஏறுறது சாதாரண  வேலையில்லை. முதல்ல தைரியம் வேணும்.

எது நடந்தாலும் தாங்கிக்கிற வைராக்கியம் இருக்கணும். பாதி தூரம் ஏறிட்டு கீழே பாத்தா  கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வரும். அந்த மாதிரி பயந்து கீழே விழுந்து கை, கால் ஒடிஞ்சவங்கல்லாம் இருக்காங்க. பாதுகாப்பா ஏறணும்...என்கிறார்  கிருஷ்ண வேணி.

பொதுவா செடி, கொடி, மரங்கள்ல இயற்கையாவே மகரந்த சேர்க்கை நடக்கும். மகரந்த சேர்க்கையில இரண்டு விதம் இருக்கு. அயல் மகரந்தச்  சேர்க்கை, தன் மகரந்த சேர்க்கை... தென்னையைப் பொறுத்தவரை குட்டை தென்னை ரகங்கள்ல தன்மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதாவது, ஒரு  மரத்துல பூக்கிற ஆண் பூவோட மகரந்தம் அதே மரத்துல முளைக்கிற பெண் பூவோட சேந்திடும். நெட்டை ரகங்கள்ல அப்படி நடக்கிற தில்லை.  வெளியில் இருந்து மகரந்த சேர்க்கை நடக்கணும். தேனீக்கள், பூச்சிகள் வாயிலா இயற்கையா அது நடக்கும்.

அதையே நாங்க செயற்கையா செய் றோம். ஒரு நெட்டை மரத்தையும் ஒரு குட்டை மரத்தையும் கலக்க வச்சு புதிய ரகத்தை உருவாக்குறோம்...  என்கிறார் பிந்து.

இமயமலையில் உள்ள உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு முதன் முதலில் சென்று சாதனை படைத்தார்கள் எட்மன்ட் ஹில்லாரி, டென்ஜிங் நார்வே ஆகியோர். இவர்கள் கடந்த 1953ஆம் ஆண்டு இந்த உலக சாதனையை படைத்தனர்.

அதன் பின்னர், இதே சாதனையை சுமார் 3 ஆயிரம் பேர் செய்துள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. 29 ஆயிரத்து 28 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பயிற்சி பெறும் முகாம்கள் ஆண்டுக்கு ஓர் முறை நடத்தப் படுகிறது.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாமில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுரிம் ஷெர்பா (29) என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு பத்திரமாக தரைப்பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

ஓரிரு நாட்கள் மட்டும் இமயமலை அடிவாரத்தில் ஓய்வெடுத்த அவர், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து ஒரே சீசனில் தொடர்ந்து 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இது போன்றதொரு சாதனையை படைக்க முயன்ற ஷெர்பா பசாங் லாமு என்ற பெண் மலையில் இருந்து இறங்கி வரும் போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தீயணைப்புப் துறையில் சாதிக்கும் முதல் பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஒரு சாதாரண பெண்மணிதான் ஹர்ஷினி கான்கிகர்.இந்தியாவிலேயே முதல் முறையாக தீயணைப்புத்  துறையில் சாதிப்பதற்காக நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

ஆண்கள் மட்டுமே இருக்கும் தீயணைப்பு துறையில் முதல்முறையாக ஒரு பெண்,அது இவர்தான். ஹர்ஷினி கான்கிகர் தீயணைப்பு துறையினரின் வீரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள்,அவர்களின் தோற்றம் காரணமாக ஈர்க்கப் பட்டார். என்னதான் பெண்கள் பல துறைகளில் சாதித்து இருந்தாலும் எப்பொழுதும் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்,

பெண்களுக்கு பாதுகாப்பு என்று கூறப்படும் பல வேலைவாய்ப்புகள் இருந்தாலும் கூட,..தன் பாதுகாப்பு,எதிர்காலம் பற்றி பொருட்படுத்தாமல் தீயணைப்பு துறையில் சாதிக்க துடிக்கும் ஹர்ஷினி  கான்கிகர், நமது இளைஞர்களின் மனதில் ஒரு ஊன்று கோலாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அநியூ அசோசியேஷன் ஃபார் நான்-டிரெடிஷனல் எம்ப்ளாய்மென்ட் ஃபார் விமன் என்பதன் சுருக்கமே அநியூ. பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் என்கிற  அடையாளத்துடன், சென்னை அண்ணாநகரில் அமைதியாக வரவேற்கிற அநியூ, பத்தோடு ஒன்றாக வரிசையில் நிற்கிற அமைப்பு அல்ல. நிஜமாகவே  பெண்கள் மேம்பாட்டுக்குப் பாடுபடுகிற நிறுவனம்!

அநியூவில் அடியெடுத்து வைத்ததுமே நம்மையும் அறியாமல் ஒரு உற்சாகம் பற்றிக் கொள்கிறது! ஊறுகாய் தயாரிப்பிலும், அப்பளம் போடுவதிலும்,  தையல் வேலையிலும் மட்டுமே பல ஆண்டுகளாக நாம் பார்த்துப் பழகிய ஏழைப் பெண்களை, இங்கே  கணினி பழகுவதையும் கார் ஓட்டுநர் கற்பதையும் மல்ட்டி மீடியாவில் அசத்துவதையும் பார்க்கும் போது உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது. அத்தனை பயிற்சிகளும் இலவசம்!

16 ஆண்டுகளுக்கு முன் வெறும் 10 பெண்களுடன் துவங்கப்பட்ட அநியூ இன்று ஆயிரக் கணக்கானவர் களின் வாழ்க்கையில் ஒளியேற்றி,  விஸ்தரித்து வருகிறது. எம்.கே.குமார் மற்றும் லட்சுமி குமார் ஆகி யோரால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பை வெற்றி கரமாக நடத்தி வருவதில் அதில்  இணைந்துள்ள நல்ல இதயம் கொண்ட தன்னார்வலர்களுக்கும் பங்குண்டு.

‘‘When you educate a woman, you educate a whole family” - இதுதான் எங்கள் குறிக்கோள். அநியூவை ஆரம்பிக்கும்போதே, காலம் காலமா  தொடரப்படுகிற, வழக்கமான விஷயங்களைத் தவிர்த்து, புது உலகத்தை, புது விஷயங்களை பெண்களுக்கு அறிமுகப்படுத்தணுங்கிறதுல தெளிவா  இருந்தோம்.

ஹோம் செவிலியர் பயிற்சியைத்தான் முதல்ல சொல்லிக் கொடுத்தோம். எத்தனையோ வீடுகளில் வயசானவங்களையும் நோயாளிகளையும்  பார்த்துக்க ஆள் இல்லை. ஹோம் செவிலியர் களுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது தெரிஞ்சது.

ஆர்வமுள்ள, வசதியில்லாத பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு பயிற்சி கொடுத்து, பெரிய மருத்துவமனைகளில்  பயிற்சியும்  கொடுத்து, பரீட்சை எழுத வச்சு, சான்றிதழ் கொடுக்கறோம். பயிற்சியை முடிச்ச அடுத்த நாளே அவங்களுக்கு வேலை தயாரா இருக்கு. ஒரு நாள்  சம்பளம் 250 ரூபாய். அனுபவத்தைப் பொறுத்து 350 ரூபாய் வாங்கறவங்களும் இருக்காங்க.

வாழ்க்கை என்னவாகப் போகுது, அடுத்த வேளை  சாப் பாட்டுக்கு உத்தரவாதம் உண்டாங்கிறதே தெரியாம வாழ்ந்துக்கிட்டிருந்த எத்தனையோ பெண்கள், இன்னிக்கு தைரியத்தோடவும்,  தன்னம்பிக்கை யோடவும், சுய கால்களில் நிற்கறதைப் பார்க்கறப்ப நிறைவா இருக்கு... - அறிமுகப்படலத்துடன் பேசுகிறார் குழுவினரில் ஒருவரான  வினோதினி.

பணமும் வசதியும் உள்ளவங்களுக்குத்தான் கணினி பயிற்சிகளும், அது தொடர்பான வேலைகளும் சாத்தியம்னு இருந்த காலகட்டத்தில், ஏழைப்  பெண் களுக்கும் அதைக் கத்துக் கொடுக்க நினைச்சோம். பேசிக், டிடிபி, டேலி, வெப் டிசைனிங், மல்ட்டி மீடியான்னு நிறைய பயிற்சிகளைக் கத்துக்  கொடுத்து, இன்னிக்கு பெரிய நிறுவனங்களுக்கு வேலை செய்து கொடுக்கிற அளவு தயார்படுத்தியிருக்கோம்.

அதே மாதிரி ஆப்டோ மெட்ரி பயிற்சி  முடிச்ச பலரும் கண் மருத்துவமனை களில் வேலை கிடைச்சு சந்தோஷமா இருக்காங்க... பெருமையுடன் பகிர்கிறார் பிராஜக்ட் மேலாளர் தான்யா. கார் ஓட்டும் பயிற்சியும், காது கேளாதோருக்கான கணினி பயிற்சியும், அநியூவின் தனித்த அடையாளங் களில் சில.
இரண்டுசக்கர வாகன பயிற்சியில் தொடங்கி, அடுத்து ஆட்டோ மற்றும் கார் ஓட்டறதுக்கான பயிற்சியை அறிமுகப்படுத்தினோம்.

பயிற்சி முடிச்ச பலரும்,  நட்சத்திர ஹோட்டல் வாலட் பார்க்கிங் வேலை யிலயும், கால் சென்டர் ஓட்டுநராகவும், பயிற்சியா ளராகவும், வேன், பேருந்து ஓட்டுநராகவும் இருக்காங்க. பெண்  ஓட்டுநர்களுக்கான தேவை எக்கச்சக்கமா பெருகிட்டு வருது. அதனால் இந்தப் பயிற்சியை முடிக்கிற அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு நிச்சயம். காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்களுக்கு எதேச்சையாக ஒரு முறை கணினி பயிற்சி கொடுக்க வேண்டி வந்தது.

பயிற்சியை முடிச்ச பிறகு அவங்கக்கிட்ட தெரிஞ்ச மாற்றமும், அவங்களுக்குள்ள உண்டான தன்னம்பிக் கையும் எங்களை மிரள வச்சது. அதுலேருந்து   மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு உதவித் தொகை யோடு பயிற்சி கொடுக்கிறதைத் தொடர்ந்து செய்துட்டு வருகிறோம் என்கிறார் அநியூவின் அட்மின் மேலாளரான சுப்பையன்.

புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண் டாக்கும் வகையில், அவர்களுக்கும் பயிற்சி,  அநியூவில் பயிற்சி பெறுகிற அத்தனை பேருக்கும் கட்டாய ஆங்கில உரையாடல் பயிற்சி என இந்த அமைப்பின் அத்தனை முயற்சிகளுமே புதுமை.   வாழ்க்கையில் நம்பிக்கையும், வாழ வேண்டும் என்கிற ஆர்வமும் உள்ள பெண் களுக்கு அநியூ காட்டுகிறது புதிய பாதை!

சாதிக்க பணம் தடையாக இருப்ப தில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார் 14 வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர், இந்த உயரத்தை அவ்வளவு சுலபத்தில் அடையவில்லை என்பது தான் முக்கியம்.

பிறந்தது படித்தது எல்லாம் சென் னையில்தான். அப்பா முகுந்த குமார் எலெக்ட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி. மூன்றாவது அக்காவுக்கு செஸ் விளையாட்டு மேல் ஆர்வம் இருந்தது. எனவே அவள் விளையாடும் போதெல்லாம் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு வயது அய்ந்துதான்.

இந்த விளையாட்டை நானும் கற்றுக் கொள்வேன் என்று அப்பாவிடம் சொன்ன போது மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அக்கா கல்லூரியில் சேர்ந்தபோது, அவளால் போதுமான நேரத்தை விளையாட்டுக்காக ஒதுக்க முடியவில்லை. அதற்காக நானும் பின் வாங்கவில்லை. விடாமல் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அத்துடன் மாவட்ட, மாநில அளவிலான போட்டி களிலும் பங்குபெற்று பரிசு வாங்க ஆரம்பித்தேன்.

இது தேசிய போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 2005ஆம் ஆண்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் வெற்றியும் பெற்றேன். அடுத்த ஆண்டே ஆசிய போட்டியில் கலந்து கொண்டு மூன் றாவது இடத்தை பிடித்தேன். அத்துடன் அதே ஆண்டு, ஜார்ஜியாவில் நடை பெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றேன்.

இங்கும் எனக்கு மூன்றாவது இடம் கிடைத்தது... என்று சொல்லும் மகா லட்சுமி, முதல் இடத் தை பிடிப்பதற்காக பயிற்சியாளர் ரமே ஷிடம் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற ரமேஷ், தனக்கு தெரிந்த அனைத்து நெளிவு சுளிவுகளையும் மகாலட்சுமிக்கு கற்றுக் கொடுத்திருக் கிறார்.

பயிற்சி தந்த உத்வேகத்தில் 2010ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒரு சில நொடி களில் முதல் வாய்ப்பை தவறவிட்டு மூன்றாவது இடம் வந்தேன். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் பரிசு கிடைத்தது. ஆனால், முதலிடம் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

நன்கு பயிற்சி எடுத்தும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மரமாக வளர்ந்தது. போட்டி நேரத்தில் ஏற்படும் மனக் கொந்தளிப்பு முதலிடத்தை நான் தவற விடக் காரணம் என்பதை உணர்ந்து கொண் டேன்... என்றவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஜாலியாக எதிர் கொண்டுள்ளார்.

பதினான்கு வயதுக்கு உட்பட் டோருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்றபோது படபடப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். அதனால்தான் ஆசைப்பட்டபடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது... என்று மகாலட்சுமி சிரித்து முடிக்கவும், பயிற்சியாளர் ரமேஷ் தொடர்ந்தார்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன் செஸ் விளையாட்டுக்கான பயிற்சி மய்யத்தை ஆரம்பித்தேன். முதல் மாணவியாக சேர்ந்தது மகாலட்சுமி தான். செஸ் விளையாட்டின் மேல் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கு செலவு செய்யும் நிலையில் அவரது குடும்பச் சூழல் இல்லை.

திறமையான ஒருவரை பணமில்லாத காரணத்திற்காக ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே இலவசமாக மகாலட்சுமிக்கு பயிற்சி அளித்தேன். எங்கள் மய்யம், அவரது வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அதற்காக மகாலட்சுமி வருத்தப்பட வில்லை.

நாள்தோறும் பயிற்சிக்கு வந்தார். பல நாட்கள் பள்ளியில் இருந்து நேராக பயிற்சிக்கு வருவார். பயிற்சி இடை வேளையில்  வீட்டுப் பாடங்களை செய்வார். இப்படி கஷ்டப்பட்டு உழைத்த தால்தான் மகா லட்சுமியால் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடிந்தது... என்கிறார் ரமேஷ்.

விடைபெறும்போது மகாலட்சுமி சொன்ன வார்த்தைதான் முக்கிய மானது. சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டல்ல. நமது நினைவாற்றலை அதிகரிக்க வைக்கும் ஒரு சக்தி. விளையாட்டில் எதிராளியை எப்படி மடக்கலாம் என்று யோசிப்போம். அந்தத் திறன் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் உதவும். அத்துடன் கணக்கு பாடமும் நன்றாகவே வரும்.

மருத்துவரான மேரி ஸ்டோப்ஸ் பெண்கள் இயக்கப் போராட்டக்காரரும் கூட. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஏழெட்டு குழந்தைகளைப் பெற்று  வறுமையில் வாடிக்கொண்டிருந்தனர். குடும்பம் பெருகாமல் இருப்பதற்காக, சுயமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் ஏராளமான  பெண்கள் மரணம் அடைந்தனர். இதனைக் கண்ட மேரி ஸ்டோப்ஸ், குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். மருத்துவ மனைகளை ஆரம்பித்து  ஏழைத்தாய்களுக்கு இலவசமாக குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான கருக்கலைப்பு போன்றவற்றைச் செய்தார்.


அடிமைத்தனத்தை எதிர்த்த சோஜோர்னர் ட்ரூத் (1797-1883)

அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரான சோஜோர்னர் ட்ரூத் அடிமைத்தன ஒழிப்புப் போராட்டங்களிலும் பெண்ணுரிமைப் போராட்டங்களிலும் மிகச்சிறந்த  பங்களிப்பைச் செய்தவர். 1851இல் பெண்கள் உரிமை மாநாட்டில் நான் ஒரு பெண்ணல்லவா? என்ற இவரது உரை மிகவும் புகழ்பெற்றது.


பெண்களுக்காக முழங்கிய சூசன் பி.அந்தோணி (1820 - 1906)

அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளி.    என்ற இயக்கத்தையும் பெண்களுக்கான பத்திரிகையையும்  ஆரம்பித்தவர்களில் ஒருவர். அமெரிக்க அய்க்கிய நாடுகளிலும் அய்ரோப்பாவிலும் சுற்றுப்பயணம் செய்து, பெண்ணுரிமையை வலியுறுத்தி பேசியவர்.  ஆண்டுக்கு சுமார் 100 மேடைகளில் முழங்கியிருக்கிறார். அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றி யவர்.


கொடி கட்டிய  எமிலி டேவிசன்(1872 - 1913)

இங்கிலாந்தின் பெண்கள் இயக்கப் போராட்டக் காரர் எமிலி டேவிசன். 1913இல் பெண்கள் இயக்கத்தின் கொடியைக் கட்டி, போராட்ட போஸ்டரை  ஒட்டுவதற்காக அய்ந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரைக்கு அருகில் சென்றார். எதிர்பாராதவிதமாக குதிரை தாக்கியதில் 4 நாள்களுக்குப் பிறகு இறந்து  போனார். ஜூன் 4ஆம் தேதியை எமிலி டேவிசன் நாளாக அனுசரித்து வருகிறார்கள்.

அண்மைச் செயல்பாடுகள்