
வாஷிங்டன், ஜூலை.27- அய்ரோப்பா கண்டத்திற்கு வடமேற்கு பகுதியில் கிரீன் லாந்து தீவு அமைந்துள் ளது. இந்த தீவில் பெரும் பகுதி பனிக்கட்டிகள் படர்ந்திருந்தது. ஆனால் பருவநிலை மாற்றம் காரண மாக சமீபகாலமாக இந்த பனிக் கட்டிகள் உருகுவது அதிகரித்தது. இதை அமெ ரிக்க நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கிரீன் லாந்து தீவை இந்தியாவின் செயற்கைகோள் படம் பிடித்தது. அதில் கடந்த 8ஆம் தேதியில் 40 சதவி கிதம் பனிக் கட்டிகள் உருகி இருப்பது தெரியவந்தது. பிறகு 12ஆம் தேதிக்குள் 97 சதவீதம் உருகி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த அளவிற்கு பனிக்கட்டிகள் உருகிய தில்லை. எனவே இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.