1642ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் பிரிட்டனில் உள்ள உள்ஸ்தோர்ப் என்னும் சிறிய ஊரில் நியூட்டன் பிறந்தார். 1666-ஆம் ஆண்டில் ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததைப் பார்த்தார். மரத்திலிருந்து ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது? மேல் நோக்கி போயிருக்க வேண்டியதுதானே அல்லது வேறுபக்கம் பறந்து போயிருக்கலாமே என யோசித்தார். ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். வானத்தில் பல கோள்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிக் கொள்ளாமல் அதனதன் பாதையில் சுற்றுவதற்கு இந்த ஈர்ப்பு சக்திதான் காரணம் எனச் சொன்னார்.
பூமி பிரபஞ்ச பாதையில் எங்காவது காணா மல் போகாதிருக்கவும் சூரியனை ஒழுங்காகச் சுற்றி வருவதற்கும் இந்த புவி ஈர்ப்பு சக்திதான் காரணம் எனக் கண்டுபிடித்தார். பூமி சூரியனைச் சுற்றுவதோடு தன்னைத்தானே சுற்றி வரும்போது பூமியில் வாழும் மக்கள் கீழே விழாமல் இருப்பதற்குக் காரணம் இந்த புவி ஈர்ப்பு சக்திதான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்.
நியூட்டன் விதிகள்: நிலாவும் பூமியும் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. பூமியின் எடை அதிகமானாலோ, நிலாவின் எடை அதிகமானாலோ அதாவது இரண்டில் ஒன்றின் எடை அதிகமானாலோ ஈர்ப்பு சக்திஅதிகமாகி விடும்.
தூரம் அதிகமானால் ஈர்ப்பு சக்தி குறையும் என்ற இரண்டையும் கண்டுபிடித்தார்.
நியூட்டன் விதி 1: அசையும் பொருளானது பிறபொருள் தடுக்கும் வரை அசைந்தபடி இருக் கும். அசையாத பொருள் பிறபொருள் அசைக்கும் வரை அசையாமல் அப்படியே இருக்கும்.
நியூட்டன் விதி 2: எந்தப் பொருளையும் அசைக்கும் பொழுது ஏற்படும் இயக்கமானது. அந்தப் பொருளை அசைத்த சக்தியின் அளவுக்கு ஏற்பவும், அந்தப் பொருளை அசைக்கிற சக்தி எந்த திசையிலிருந்து உண்டாகிறதோ அதே திசையிலும் நிகழும்.
நியூட்டன் விதி 3: எந்த அசைவு ஏற்பட்டா லும் அதே அளவில் அதற்கு எதிரான திசை நிகழும்.
புதிய தொலைநோக்குக் கருவி
கலிலியோ முதலில்தொலைநோக்கி கருவியைக் கண்டுபிடித்தார். அதில் சில குறை பாடுகள் இருந்தன. அதில் உள்ள குறைபாடு களைக் களைந்து புதிய கருவியைக் கண்டு பிடித்தார் நியூட்டன். சூரிய ஒளியானது வெண்மை நிறமாகத் தெரிந்தாலும் அது ஏழு நிறங்களால் ஆனது என்று நியூட்டன் கண்டுபிடித்தார்.
பொருள்கள் நிறங்களை உண்டாக்கவில்லை. பொருள்களின்மீது படுகிற ஒளிக்கதிர்கள்தான் நிறங்களைக் கொண்டிருக்கின்றன என்றும், ஒரு பொருள் மஞ்சள் நிறம் என்றால் அது தன்மேல்படுகிற மஞ்சள் ஒளிக்கதிர்களை மட்டும் நம் கண்ணுக்குத் தெரியும்படி செய்துவிட்டு புறநிறங்களை உள்வாங்கிக் கொள்கிறது என்றும் கண்டுபிடித்தார். மழைத்தூறலின் ஊடே புகுந்துவரும் சூரிய ஒளி ஏழு நிறங்களாகப் பிரிகின்றன. முப்பட்டைக் கண்ணாடி வழியே ஊடுருவிச் செல்லும் ஒளியும் ஏழு நிறங்களாகப் பிரிகின்றன. இதை மழைத் துளிகள் செய்வதால் வானவில் தோன்றுகிறது எனக் கூறினார். இவரது மேஜையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவத்தியை இவர் வளர்த்த நாய் தட்டி விட்டதால் 20 ஆண்டுகால ஆராய்ச்சிகள் எரிந்து சாம்பலானது.
கடைசி காலத்தில் வறுமையில் வாடிய நியூட்டன் 1727ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி மரணமடைந்தார்.