Banner

இந்தியாவில் தற்போது 50 கோடிக்குமேல் செல்பேசியை பயன்படுத்து கின்றனர். இதனால் செல்பேசி வழியாக குறுஞ்செய்தி மூலம் விளம்பரம் ஏராளமாக வெளியிடபடுகின்றன. இந்த செல்பேசிவழியாக குறுஞ்செய்தி விளம்பரத்தினால் பாதிக்காதவர்களே இல்லை என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு செல்பேசியின் இந்த குறுஞ்செய்தி விளம்பரங்களின் தொல்லை உள்ளன. இதனை தவிர்க்க முடியுமா? என்றால் முடியும்!

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த தொல்லையை தவிர்க்கலாம் http:/ndncregistry.gov.in/ndncregistry/index.jsp என்ற இணையத் தளத்திற்கு சென்று DND Registration Check என்ற இணைப்பை தெரிவு செய்து கொண்டு செல்பேசி எண்ணை பதிவு செய்து கொள்க.

1) ஏர்டெல்:  நம்முடைய செல்பேசியானது ஏர்டெல் ஆக இருந்தால் START DND என 121 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பவும்.

2) வோடா ஃபோன்: நம்முடைய செல்பேசியானது வோடா ஃபோனாக இருந்தால் ACT DND என 111 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பவும்.

3) ரிலையன்ஸ்: நம்முடைய செல்பேசியானது ரிலையன்ஸ் ஆக இருந்தால் முதலில் http://www.reliancecommunications/co/in/communications/Rm/rm_index.html என்ற இணையத்தளத்திற்கு சென்று DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும்.

4) அய்டியா: நம்முடைய செல்பேசியானது அய்டியாவாக இருந்தால் முதலில் 1909 என்ற எண்ணில் DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும் அல்லது இதனை பதிவு செய்வதற்கு முதலில் ‘START DND’ என்ற குறுஞ்செய்தியையும் இதே எண்ணிற்கு அனுப்பினால் போதும்.

5) டாட்டா இண்டிகாம்: நம்முடைய செல்பேசியானது டாட்டா இண்டிகாம் ஆக இருந்தால் http://www.tatatele.in/dnd/DND Action. என்ற இணையத்தளத்திற்கு சென்று DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும்.

6) டாட்டா டோகோமா: நம்முடைய செல்பேசியானது டாட்டா டோகோமா ஆக இருந்தால் இதனை பதிவு செய்வதற்கு முதலில் ‘START DND’ என்ற குறுஞ்செய்தியையும் அதன் பின்னர் STOP DND என்ற குறுஞ்செய்தியையும் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும்.

7. பி.எஸ்.என்.எல்: நம்முடைய செல்பேசியானது பி.எஸ்.என்.எல். ஆக இருந்தால் http://pdnc.bsnl.co.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும் அல்லது கட்டணமல்லாத 1909 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறப்படும் கட்டளைகளுக்கேற்ப பதிவு செய்து கொள்க அல்லது இதனை பதிவு செய்வதற்கு முதலில் ‘START DND’ என்ற குறுஞ்செய்தியையும், அதன் பின்னர் ‘STOP DND’ என்ற குறுஞ்செய்தியையும் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும் விளம்பரக் குறுஞ்செய்திகள் நிறுத்தப்படும்.

ஓ... இருக்கிறது. ஆனால் பூமியில் அல்ல..! ஒரு நாளைக்கு இரண்டு முறை சூரியன் உதிக்கும் வாய்ப்பு புதன் கோளில் இருக்கிறது. புதன் கோள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதனால் ஒரு நேரம் புதன் கோள் சூரியனிலிருந்து 45 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னொரு நேரம் 67 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது புதனின் வேகம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோமீட்டர். சூரிய மண்டலத்திலேயே அதி வேகத்தில் பயணிக்கிற கோள் புதன்தான். புதனின் சுற்றுப்பாதை இப்படி அமைந் துள்ளதால் புதன் கோளின் வானில் சூரியன் ஒரு நேரம் பெரிதாகவும் இன்னொரு நேரம் சிறியதாகவும் காணப்படும்.

சுற்றுப்பாதை வேகம் அதிகம் என்பதாலும் அச்சில் சுழலும் வேகம் மிகக் குறைவு என்பதாலும் புதனில் குறிப்பிட்ட சில இடங்களில் சூரியன் உதயமாகிய பிறகு அதே கிழக்கு திசையில் மறையும். பிறகு மறுபடி உதிக்கும். சூரிய மண்டலத்தில் இப்படி ஒரே நாளில் இரண்டு தடவை சூரியன் உதிக்கிற அதிசய கோள் புதன் மட்டுமே!

எத்தனை நாள்தான் பூமியிலேயே சுரங்கம் தோண்டி தங்கம், வைரம் என்று வெட்டி எடுப்பது? ஏற்கனவே அரிதாகிப் போன அந்தக் கனிமங்களை இன்னமும் பூமியில் தேடிக்கொண்டிருப்பது வேஸ்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ப்ளா னட்டரி ரிசோர்ஸஸ் என்ற நிறுவனம். அதனால் தான் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் விண்கற்களில் புதைந்திருக்கும் பொக்கிஷங் களைத் தேடி புறப்பட்டுவிட்டது அந்நிறுவனம்.

நம் பூமிக்கு அருகிலேயே பல விண்கற்கள், சிறிதும் பெரிதுமாக உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில இன்னொரு கிரகமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மிகப் பெரியவை. ஆஸ்டிராய்ட் என்று அழைக்கப்படும் அந்த விண்கற்களைத் தோண்டிப் பார்த்தால், பூமியைப் போலவே தண்ணீர் கிடைக்கலாம். ஏன்... பிளாட்டினம், வெள்ளி போன்ற உலோ கங்கள் கூடக் கிடைக்கலாம்.

500 மீட்டர் குறுக்களவு உள்ள சிறு கோள்களில் பெரிய அளவில் பிளாட்டினம் உள்ளதாக நாசா விண் வெளி ஆராய்ச்சி மய்யத்தின் நிபுணர்கள் கணக் கிட்டுள்ளனர். அவற்றைத்தான் வெட்டி எடுக்கத் திட்டமிட்டுள்ளது பிளானட்டரி ரிசோர்ஸஸ்.

விண்கலத்தோடு விண்கற்களை நெருங்கு வதற்கு முன்பு எந்தெந்த விண்கற்களில் என் னென்ன பொக்கிஷங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். இதற்கான தொழில்நுட்ப பிரச்சினை கள், செலவுகள், போக்குவரத்து ஆகியவற்றை அந்த நிறுவனமே எதிர்கொள்ளும். இன்னும் பத்தாண்டு களில் கோள்களில் உள்ள செல்வங்களைத் தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகி விடும்.

கிரகங்களில் செல்வங்களைத் தோண்டி எடுக்கும் இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அது தொழிற் புரட்சியைப் போல் மனித குலத்திற்கு பெரிய அளவில் பலனளிக்கும் சம்பவமாக அமையும் என்கிறார்கள். சில கோள்களும் அளவில் சிறியதாக இருப்பதால் கனிம வளங்களை எடுப்பது சுலபம் என கருது கின்றனர் பிளானட்டரி ரிசோர்ஸஸ் நிறுவனத் தினர். இக்கோள்களுக்கு புவி ஈர்ப்பு சக்தி பலமாக இல்லாததால் ஒரு தானியங்கி வானூர்தி மூலம் கனிமங்களை எடுக்கலாம்.

விண்வெளியில் மிதக்கும் பாறைகளிலிருந்து தண்ணீரை எடுத்து அதை ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக எரிபொருளை நிரப்பும் நிலையங்கள் விண்வெளியில் அமைக்கப்படும். வருங்காலத்தில் வரப்போகும் அப்படிப்பட்ட விண்வெளி ஃப்யூவல் பங்க் ஒன்றை கனடா நாட்டு கிராஃபிக் வடிவமைப் பாளர் பிரயன் வெர்ஸ்டீஜ் வடிவமைத்திருக்கிறார். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

கேட்பதற்கே கனவு போல இருக்கும் இந்த ப்ராஜக்ட், பெருத்த பொருட்செலவு வைக்கும். ஆனாலும் கவலை இல்லை. உலகின் முதன்மை நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் போன் றவையும் டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

அண்மைச் செயல்பாடுகள்