
மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?
தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு
மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?
தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)
மகன்: (பயந்து கொண்டு) அப்பா.
தகப்பனார்: என்னடா?
மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.
தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?
மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?
தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.
மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?
தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.
- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.