Banner

மருத்துவம்


ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கொழுப்பு சத்துள்ள உணவு பொருள்களை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர். இருந்தும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கட்டுப்படுத்த ஸ்டேடின்ஸ் என்ற ஊசி மருந்தை சிலர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்தை இங்கிலாந்தில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது சரிவர செயல்பட வில்லை. மேலும் சில பக்க விளைவுகளை எற்படுத்துவதாக கருதி அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து தற்போது புதிய ஊசி மருந்தை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு மேஜிக் புல்லட் ஜேப் என பெயரிட்டுள்ளனர். இந்த ஊசி மருந்து ரத்தத்தில் கெடுதல் விளைவிக்கும் கொழுப்புச் சத்தை குறைத்து நலமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த மருந்தை மனிதர்களிடம் பயன்படுத்துவது குறித்து முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதற்கான ஆய்வு 18 வயது முதல் 45 வயது வரையிலான 54 ஆண்கள் மற்றும் 2 பெண்களிடம் நடத்தப்பட்டது. அதில் நல்ல பலன் கிடைத் துள்ளது. இந்த சிகிச்சை ஏ.எம்.ஜி145 என பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கருப்பு தேநீர், பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்....!

மது, புகைப் பழக்கம் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவற்றை நிறுத்திவிட்டு கருப்பு தேநீர், பழங்கள் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மது, புகைப் பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக நுரையீரல் ஆராய்ச்சி பிரிவு மருத்துவர்கள் ஸ்டான்டன் சியு, கைசர் பெர்மானென்டி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.

1978ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. 1.26 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது. இவர்களில் பலர் தொடர் மதுப் பழக்கம் உள்ளவர்கள்.

ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி கைசர் கூறியதாவது: மதுப் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்காணித்து நடத்தப்பட்ட ஆய்வு இது.

தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் உள்ள 1,852 பேருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. நோய் பாதிப்பு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் நோய் தீவிரம் ஆகாமல் எளிதாக விடுபட்டனர்.

புகை, மது பழக்கம் இரண்டுமே நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. இரண்டு பழக்கமும் ஒருசேர இருந்தால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

இதய பாதிப்புகளும் தலைதூக்கும். புகை, மதுப் பழக்கத்தை கைவிட்டு, கருப்பு தேநீர், பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

புரூன்ஸ் என்றும் உலர் பிளம்ஸ் ரக பழங்கள் வெளிநாடுகளில் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவை முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகள், பல சரக்கு கடைகளில் கிடைக்கின்றன.

இவை நார்சத்து, இரும்பு சத்து கொண்டு உள்ளதால் மூலநோய்க்கு ஏற்றது என்று ஆராய்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்யோவா பல்கலைக்கழக உள்மருத்துவ துறையில் குடல் சிகிச்சை நிபுணர் சதீஷ்ராவ் ஆய்வில், கடுமையான மூலம், மலச்சிக்கல், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புரூன்ஸ் பழங்கள் கொடுத்தால், இதில் நார் சத்து அதிகம் உள்ளதால் பெரும் அளவில் குணம் தெரிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இவர் செய்த ஆய்வில் 40 ஆண், பெண் மூலம் நோய் உள்ளவர்களை தேர்வு செய்து 8 வார ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 6 புரூன் பழங்கள் நாள் ஒன்றுக்கு 2 முறை இந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது.

இதில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மூலம் வலி குறைந்தது என்றார். உணவியல் நிபுணர் கீது அமர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:- உலர் புரூன்ஸ் பழங்கள் சாப்பிட்டால் முழுமையான நார்சத்து கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சோறு, தண்ணீர் போல தூக்கமும் மிகமிக அவசியமானது. போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இயல்பு நிலை பாதிக்கப்படும். இந்த பாதிப்பை இன்சோம்னியா என்கிறது மருத்துவ உலகம். இந்த பாதிப்பில் இருந்து விடுபட உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக் கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நன்கு தூக்கம் வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் தரும் அறிவுரை இது:

கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும். இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும். நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி பழச்சாறு குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவுகளில் சிலர் இஞ்சி உபயோகிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் பயன் பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் பயன் பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் அதன் மகிமைகள் பற்றிக் கூறுவார்கள்.

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான்.

இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு.

இரவு வேளைகளில் தூங்குவது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் வேலை செய்வதனால் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியைத் தொடங்க முடியும்.

ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. அதுபோலத்தான் நித்திரையும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள். 50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான இஸ்கெமிக் ஸ்ட்ரோக்கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோர் முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூக்கத்தைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மைச் செயல்பாடுகள்