Banner
முன்பு அடுத்து Page:

கம்பர் மாநாடு

சென்னையில் 16.4.1944இல் கோகலே ஆலில் கம்பர் மாநாடு நடந்ததானது குழ்ப்பத்தில் முடிந்த தாகத் தெரிகிறது. கம்ப ரசிகர்கள் கம்பர் விழாவை 10 நாள் நாடெங் கும் நடத்த வேண்டுகோள் விட் டார்கள். அந்த ரசிகர்கள் சென் னையை அவ்விழாவிற்குத் தலை நகராகக் கொண்டு அங்கு 10 நாளும் பெரிய விழாவாகவே நடத்தி அதில் முக்கிய பங்காளிகளாகவும் இருந்தார்கள். இந்த விழாவிற்கு உண்மைச் செயலாளர்கள் சென்னை எவரெஸ்டு ஹோட்டல் சொந்தக்காரரும், தோழர் டி.கே........ மேலும்

25 மே 2013 10:39:10

உண்மை

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும். கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை....... மேலும்

24 மே 2013 16:57:04

சோதிட அறியாமை

சோதிட அறியாமை

சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது? அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை (சோதிடத்தை) ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப்படைக் கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை. விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள்....... மேலும்

24 மே 2013 16:56:04

அரசும் - அமைச்சும்

அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அரு வருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம் தான் நமக்குத் தேவை என்று கூறுகிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு....... மேலும்

24 மே 2013 16:53:04

சிந்தனைப் பூக்கள்

சிந்தனைப் பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை. ############## மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து,....... மேலும்

24 மே 2013 16:50:04

தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை உருவாக்கம் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை உருவாக்கம்  அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம் செல் கரு முட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல் கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற் படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்....... மேலும்

23 மே 2013 15:08:03

திரவ வடிவில் சோலார் பேனல்: சுவர், தரை என எந்தப் பகுதியிலும் பெயின்ட் போல பூசலாம்

திரவ வடிவில் சோலார் பேனல்: சுவர், தரை என எந்தப் பகுதியிலும் பெயின்ட் போல பூசலாம்

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின் உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற் பத்தியில் அரசுகள் கவனம்....... மேலும்

23 மே 2013 15:07:03

இந்திய பாதுகாப்புப் படைகளில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்திய பாதுகாப்புப் படைகளில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்தியாவின் பாதுகாப்பை அதிகபட்சம் நிர்ணயிக்கும் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கப்பல்படை, எல்லையோர ராணுவப் படை போன்றவற்றில் ஆண் விண்ணப்பதாரர்களை வரும் ஜனவரி 2014 முதல் பயிற்சியளிக்கும் டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி.,-118) பிரிவுக்கு ஆண் பாலினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இந்திய ராணுவத்தின் சார்பாக டி.ஏ.வி.பி., அறிவித் துள்ள இந்தப் பதவியில் சிவில் பிரிவில் 15 இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 இடங்களும், ஆட்டோமொபைல்....... மேலும்

22 மே 2013 15:35:03

என்.அய்.டி.,யில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்கள்

என்.அய்.டி.,யில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்கள்

இந்தியாவின் பிரசித்தி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் என்.அய்.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முக்கிய இடத்தில் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. தமிழகத்தின் திருச்சியில் இதன் கிளை உள்ளது. புகழ் பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்ப வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.எஸ்.சி., பி.சி.ஏ.,....... மேலும்

22 மே 2013 15:32:03

டி.ஆர்.டி.ஓ.,வில் காலியிடங்கள்

டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., அடிப் படையில் ராணுவம் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1958இல் டெக்னிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட், டெக்னிகல் டெவலப்மெண்ட் - புரொடக்சன், டிபன்ஸ் சயின்ஸ் ஆர்கனைசேஷன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. முதலில் சிறிய நிறுவனமா கவும், 10 ஆராய்ச்சி மய்யங்களையும் கொண்டதாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு தற்போது பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது........ மேலும்

22 மே 2013 15:30:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கர்நாடக போலீசார் தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில், நான் கிருஷ்ணனாம்; நீ கோபிகையாம் என்ற வசனத்தை அடிக்கடி பக்தைகளிடம் சொல்லக் கூடியவர் நித்யானந்தா எனக் குறிப்பிட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை.

டவுட் தனபாலு: இது ஆபாசமா...? அப்போ, கர்ப்பப்பை இருக்கறதால தான், குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வருது; அதனால, பெண்கள் எல்லாம் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு உங்க பகுத்தறிவுப் பகலவன் சொன்னாரே.. அதுக்குப் பேர் என்னவாம்...?

- தினமலர் 19.7.2011

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே அது தினமலர் வாளுக்குத்தான் பொருந்தும். கேட்ட கேள்விக்கு என்ன பதில்? நித்யானந்தா சொன்னது ஆபாசமே இல்லையா?! வக்கிர துர்க்குணமா இல்லையா? பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் கோழைத்தனம் தானே தினமலரின் பதில்?

பிள்ளைப் பெறும் எந்திரம்தான் பெண்கள் என்று கருதப்படும் சமூக அமைப்பில் பெரியார் சொன்ன புரட்சி மொழிதான் கர்ப்பப்பையை எடுங்கள் என்பது. பெண்கள் உரிமை - முன்னேற்றம் - கிளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குக் கருத்து. அது - பெண்ணியல்வாதிகளால் வரவேற்கப்படும் கருத்து.

ஆனால் நித்யானந்தா பக்தைகளைப் பார்த்து நான் கிருஷ்ணன் - நீ கோபிகை! என்று சொன்னது ஆபாசமானது - இரண்டும் ஒன்றல்ல.
கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய காம வெறியாட்டம் தினமலர் கூட்டத்திற்கு லீலைகளாக இருக்கலாம்.

குளத்தில் கோபிகைகள் நீராட, அவர்களின் உடைகளைத் திருடிச் சென்று மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த ஒழுக்கக் கேடன் அவாளின் பார்வையில் உத்தமப் புத்திரக் கடவுளாக இருந்து தொலையட்டும்!

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்கிற சாத்திரத்தைக் கடைபிடிக்கும் பார்ப்பனர்களிடத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

ஆடைகளைத் தருமாறு கோபிகைகள் கெஞ்சிக் கூத்தாட, கரைக்கு வந்து இரு கைகளையும் தலைக்குமேல்  தூக்கிக் கும்பிட்டுக் கேட்டால் தான் கொடுப்பேன் என்ற நிபந்தனையை விதித்து, பெண்களின் முழு நிர்வாணத்தை ரசித்த காலிப் பயல் அவாளின் கண்ணிறைந்த கடவுளாகவே போய்த் தொலையட்டும்!

அதைப் போய் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார் அவர்கள் சிந்தனையோடு முடிச்சுப் போடுவது தினமலரின் சீரழிந்த, சீக்குப் பிடித்த வக்கிரப்புத்தியைத்தான் வெளிப்படுத்தும். இதே தினமலர் வார மலரில் (23.12.2007) சிதம்பரம் தீட்சதர்கள் வீட்டில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைப்பற்றி எழுதியதே - நினைவு இருக்கிறதா?

பல ஆண்டுகளாகவே சிதம்பரம் தீட்சதர்கள் தங்கள் பெண்களுக்கு ஏழு வயது ஆகும் முன்னரே திருமணம் செய்து விடுகின்றனர். மாப்பிள்ளைப் பையனுக்கு 12 வயதுக்குள்தான் இருக்கும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கிடையாது. வீட்டிலேயே வேத பாடங்கள் சொல்லித் தருகின்றனர்.

பால்ய விவாகத்தை 5 நாள் திருமணச் சடங்காக நடத்துகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் புகுந்த வீடு போய் விடுவார்கள். துள்ளித் திரிந்து விளையாடிய பெண், மாட்டுப் பெண்ணாகி வீட்டு வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

பெண்ணுக்கு அய்ந்து வயதில் திருமணமானாலும், மூன்று வயதில் திருமணமானாலும் அன்று முதல் அந்தப் பச்சைக் குழந்தைக்கு மடிசார் புடவை கட்டிவிடுகின்றனர். மாமன் மாமி கால்களில் விழுந்து கும்பிடவும் பழக்குகிறார்கள். 14 வயது ஆகும் திருமணமான ஒரு தீட்சதர் பெண்ணுக்கு மூன்று, நான்கு குழந்தைகள் கூடப் பிறந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர் உலகம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலையோ...

(தினமலர், வாரமலர் டிசம்பர் 23, 2007)

தீட்சதர் வீட்டு 14 வயது பெண் 4 குழந்தைகள் பெறும் நிலைக்கு என்ன பெயர்?

பிள்ளை பெறும் எந்திரமாகப் பெண் இருக்கிறாளே என்று தந்தை பெரியார் சொன்னது உண்மைதானே!

உங்காத்துப் பெண்ணுக்கும் சேர்த்துதானே பெரியார் குரல் கொடுத்தார், அதைக் கொச்சைப் படுத்துகிறாயே!

1928ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு  தினமலர் போல அப்பொழுது இந்து ஏடு முந்திரிக்கெட்டையாகத் துள்ளும். அதுபற்றிய ஒரு குறிப்பு இதோ: (திராவிடன் இதழில் (13.3.1928 பக்கம் 7)

இந்து பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்குக் கல்யாணத்துக்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ. இந்துவே! நீர்  சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே இந்தக் காலத்தில்கூட, 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதாவது விவாகச் சடங்கல்ல, அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால், ஓ, இந்துவா! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால், அந்த 10 அல்லது 12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாகப் பெயர் செய்து மொட்டையடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்கார வைப்பதேன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி போல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் 7).

அந்த இந்துவின் மறு அவதாரமாக தினமலர் திரிநூல் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது.

அன்று இந்து மறுமொழிகூட கூற முடியாமல் திணறியதுபோல், அனேகமாக ஒவ்வொரு நாளும் தினமலர் சவுக்கடி மட்டும் புத்தி கொள்முதல் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை!

பார்ப்பனர்களுக்கு மானமாவது! வெட்கமாவது!!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்