
இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 23- 1975ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam....... மேலும்
23 மே 2013 16:24:04

கோவை, மே 23-கோவை மாங்கரை, சோமையம்பாளையம், சோமையனூர், காளையனூர், தடாகம் ரோடு பகுதியில் 22 யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூன்று குழுவாக திரியும் இந்த யானைகள், வீடுகளை இடித்து, கதவை உடைத்து அரிசி சாப்பிடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் ரோட்டில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கல் சூளை வளாகத்திற்குள் யானைகள் புகுவதால் செங்கல் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகம் ரோடு அனுவாவி....... மேலும்
23 மே 2013 15:00:03

கேள்வி: பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஏடு களில் வந்த செய்தியைப் படித்தீர்களா? கலைஞர்: படித்தேன்; குறிப்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையையே படித்தேன். தலைப்பே, வாழ்த்துரை களை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்று வெளியிட் டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த பகுதி வருமாறு:- நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர், ஆறு மாதங் களுக்கு சஸ்பென்ட் செய் யப்பட்டனர். தி.மு.க........ மேலும்
23 மே 2013 14:51:02

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்
22 மே 2013 15:32:03

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்
22 மே 2013 15:28:03

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்
22 மே 2013 15:26:03

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்
22 மே 2013 15:22:03

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே, இன்றைய இந்து நாளிதழில் “Expressway : Contractor demands Rs. 103.95 Crores” என்ற தலைப்பில் புகைப்படத் துடன் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :- “Soma Constructions Ltd., the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project, has sought Rs. 103.95 crore from the National Highways Authority of India. The latest....... மேலும்
21 மே 2013 15:42:03

சென்னை, மே 21- பி.இ. சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (மே 20) ஆயிரக்கணக்கான மாண வர்கள் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். பி.இ. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர். எனவே, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்....... மேலும்
21 மே 2013 15:37:03

ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ....... மேலும்
21 மே 2013 15:12:03
முனைவர்
பேரா ந.க. மங்களமுருகேசன்
(நேற்றைய தொடர்ச்சி...)
இதற்கு நான்கு கூறுகள் துணை புரிந்தன என்றால் அது மிகையாகாது.
முதலாவதாக ஆங்கிலேய அரசு பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தடை செய்ய முயன்றது. நெல்லூரில் இருந்த வருவாய்த் துறையில் ஏறக்குறைய 50 பார்ப்பனர்களின் கட்டுப்பாடு இருக்கிறது என உறுதி செய்த பின்னர், அவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் என்று உறுதி செய்து கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களில் இரண்டே பேரை மட்டும் இடமாற்றம் செய்தார்.
எனவே ஆளுநர், அய்ரோப்பிய அதி காரி ஏறக்குறைய இந்தக் குடும்பத்தவர் தவறுகளை, குற்றங்களைக் கண்டறிந்து தண்டிக்க அதிகாரமற்றவராகவே இருக் கிறார் என்று கண்டறிந்து வருவாய்த் துறை நடைமுறைக் குறிப்பில் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து வருவாய் வாரியத்தின் நிலைபெற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியாளர்கள் கீழ்நிலைப் பணிகளில் சில செல்வாக்குள்ள குடும்பங் கள் ஆதிக்கம் செலுத்தாதவாறு மிகவும் கவனத்துடன் கவனிக்க வேண்டும். பல்வேறு சாதியினரிடையே முதன்மை நியமனங்கள் பங்கிடப்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தாசில்தார் பதவிகளில் ஒரு பங்கு பார்ப்பனர் அல்லாத சாதியினருக்கு உரியவையாதல் வேண்டும். இரண்டு முதன்மை வருவாய்ப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மாறுபட்ட வகுப்பினராக இருத்தல்வேண்டும்.
1871 இல் இந்த எச்சரிக்கைக்குப் பின்னரும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு மேலாளர் டபிள்யூ. ஆர். கார் னிஷ், ஒவ்வொரு சிக்கலையும் பார்ப் பனியக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதற்கு எதிர்ப்பு இருப்பதைக் கண்டார். எனினும் இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பனர் களைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இதன் வாயிலாகப் பார்ப்பனர் அல்லா தாரைப் பார்ப்பனருக்கு எதிராக நிறுத்தியது.
இரண்டாவதாகக் கல்வி விரிவாக்கம் 1890-களில் ஏற்பட்டது. சென்னை மாகாணத்தில் 1858 முதல் 1917 வரை 60 ஆண்டுகளில் மொத்தப் பார்ப்பனர்களின் விழுக்காடு 57 முதல் 67 வரை இருந்தது. அறுபது ஆண்டுகளில் பி.ஏ.தேறிய பார்ப்பனர்களின் வீதம் அதிகமாகவும், பார்ப்பனரல்லாத இந்துக்களின் வீதம் குறைவாகவும் இருந்தது. மூன்றே விழுக்காடு இருந்த பார்ப் பனர்களில் கல்வித் தேர்ச்சி வீதம் 1858 இல் 54 முதல் 62 வரையும் 1901-1917 இல் 63 முதல் 66 விழுக்காடாகவும் இருந்தது. பார்ப்பனரல்லாத இந்துக்கள் 86 விழுக் காடாக இருந்தவர்கள் அதே கால கட் டத்தில் பட்டம் பெற்றவர்கள் 2.4 முதல் 16 விழுக்காடு எனவும் 25 முதல் 28 விழுக் காடு வரையும் இருந்தனர்.
மூன்றாவதாக நடுத்தரப் பிரிவினர் இடப் பெயர்வு சென்னைக்கு ஏற்பட்டது. பலர் ஆங்கிலேயரிடத்துப் பணி புரிந்தனர். அவ்வாறு பணி புரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி வாய்ப்பை எதிர் நோக்கினர்.
நான்காவதாக இரட்டை ஆட்சி அமைப்பில் மேற்கொண்ட பணியைக் குறிப்பிடவே பார்ப்பனரல்லாத இளைஞர் களுக்கு இது தேவைப்படும் வாய்ப்பினை அளித்தது. பார்ப்பனர்களின் வலிமைக்கு எதிரான முயற்சி இது. இவ்வாறான எதிர்ப்பு தென் இந்திய நல உரிமைச் சங்கமாக முகிழ்த்தது மட்டுமல்லாது 1917 இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளி யானது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றில் பார்ப்பனரின் மேலாதிக்கத்திற்கு எதிரானதாய் அமைந்தது.
பார்ப்பனரல்லாதாரில் 1885 இல் தாழ்த்தப்பட்டோரைத் தனியாகக் காணும் முயற்சி நடைபெற்றது. மறைதிரு ஜான் ரத்தினம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, திராவிடப் பாண்டியன் என்னும் இதழை அயோத்திதாசப் பண்டிதர் நடத்திவந்தார்.
1891 இல் அயோத்திதாசர் திராவிட சபை எனும் அமைப்பை நிறுவி, 1909 முதல் அதை திராவிட சபையாக மாற்றினார். அயோத்திதாசர் திராவிடமென்பதே தமிழென்பதற்குச் சூத்திர ஆதாரங்கள் இருப்பதுடன் வடநாட்டோரும் சிங்கள தேசத்தோரும் தமிழை, திராவிட பாஷை யென்றும், தமிழ் பாஷைக்குரியோரைத் திராவிடர்களென்றும் வழங்கி வருவதை நாளது வரையில் காணலாம் எனக் கூறினார். இதனை அயோத்திதாசர் சிந்தனைகளில் காணலாம். அயோத்தி தாசர், பார்ப்பனரல்லாதாரின் திராவிடக் கருத்தியலின் முன்னோடியென்று கூறலாமேயன்றி, அதை இயக்கமாக அவர் மாற்றவில்லை.
19.11.1908 இல் விருதை சிவஞான யோகி என்பவர், விருதுநகரில் திராவிடர் கழகம் எனும் அமைப்பைத் தொடங்கி, திராவிட மொழி பேசுவோரைத் திருவிடர் என்றே குறித்தார். இந்தத் திருவிடர் கழகம் பதவி, அலுவலர்கள் ஆகியவை களையெல்லாம் அரசிடம் விண்ணப் பித்துக் கேட்கவில்லை. இதன் கொள்கை திருவிடரின் பழைய வரலாறுகளையும், திருவிட மொழியின் உண்மை வரலாறு களையும் ஆராய்ச்சி செய்தல் மட்டுமே எனினும் பிற்படுத்தப்பட்டோர் விழிப் புணர்ச்சிக்கு உதவிய பங்காற்றியது. திருவிடர் கருத்தியல் உருவானதேயன்றி அது ஓர் இயக்கமாகக் உருக் கொள்ள வில்லை.
1909-ஆம் ஆண்டு சென்னை பார்ப்பனர் அல்லாதார் சங்கம் எனும் ஓர் அமைப்பினை வழக்கறிஞர் பி.சுப்பிர மணியம், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் உருவாக்கிய செய்தி ஆங்கில ஏடு தி மெட்ராஸ் மெயிலில் 1.5.1909 இல் வெளியாகியுள்ளது.
பார்ப்பனர் அல்லாதார் சங்கத்திற்கு சென்னை திராவிடர் சங்கம் எனப் பெயரிடலாம் எனும் கருத்தை வி. வண்ண முத்து என்பவர் வெளியிட்ட செய்தி 6.5.1909 அதே சென்னை மெயில் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.
பதவிகள், வேலைவாய்ப்புகளில் புறக் கணிக்கப்பட்டதை ஒதுக்கப்பட்டதைப் பார்ப்பனரல்லாதார் உணர்ந்து, அமைப்பு அடிப்படையில் அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க முன்வந்த அமைப்புகளில் மெட்ராஸ் யுனைட்டட் லீக் (ஆயனசயள ருவைநன டுநயபரந) என்பதைத்தான் கூறவேண்டும்.
சென்னை மாநகரில் பணியாற்றிய அரசு ஊழியர்களில் சிலர் தாங்கள் பார்ப்பனரல்லாதாராக இருந்த ஒரே காரணத்தாலேயே பதவி பெறுவதில் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப் பட்டதையும் வேலை உயர்வு முதலிய நியாயமான வாய்ப்புகள் மறுக்கப் பட்டதையும் உணர்ந்து, மனம் வருந்தி, மனம் புழுங்கிக் கலந்துரையாடவும், இணைத்து செயல்படவும் ஒன்று பட்டுத் தங்கள் குறைகளை, நியாயங்களை எடுத்துரைக்க இந்த அமைப்பை உருவாக் கியவர்கள் அரசியல்வாதிகளோ, அர சியல் இயக்கத்தவர்களோ அல்லர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.