
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்
22 மே 2013 15:32:03

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்
22 மே 2013 15:28:03

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்
22 மே 2013 15:26:03

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்
22 மே 2013 15:22:03

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே, இன்றைய இந்து நாளிதழில் “Expressway : Contractor demands Rs. 103.95 Crores” என்ற தலைப்பில் புகைப்படத் துடன் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :- “Soma Constructions Ltd., the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project, has sought Rs. 103.95 crore from the National Highways Authority of India. The latest....... மேலும்
21 மே 2013 15:42:03

சென்னை, மே 21- பி.இ. சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (மே 20) ஆயிரக்கணக்கான மாண வர்கள் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். பி.இ. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர். எனவே, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்....... மேலும்
21 மே 2013 15:37:03

ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ....... மேலும்
21 மே 2013 15:12:03

புதுவை, மே 21- நெய் வேலி என்எல்சியில் பணி புரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் பணி நிரந்த ரம் செய்யக்கோரி பல் வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்த னர். இன்கோசர்வ் சொசைட்டி தொழிலா ளர் மற்றும் ஊழியர் சங் கத்தினர் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடுத்த னர். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் வெளியா னது. அதில், என்எல்சி யில் பணியாற்றும் ஒப் பந்த தொழிலாளர்களில் சுமார்....... மேலும்
21 மே 2013 14:31:02

சென்னை, மே 21- டெல்டா பாசனத்துக் காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலி ருந்து தண்ணீர் திறந்து விடுவது கேள்விக் குறி யாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணை யத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர் நாடக காங்கிரஸ் கூறி யிருப்பது தமிழக மக் களை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது. நாளொன்....... மேலும்
21 மே 2013 14:29:02

விழுப்புரம், மே 21- தமிழக சட்டப்பேரவை யிலேயே மின்வெட்டு ஏற்பட்டது தான் தமி ழகத்தில் ஆளும் அதி முக அரசின் இரண்டு ஆண்டு சாதனை என்று மு.க.ஸ்டாலின் கூறினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்ப உதவியாளர் சதீஷ் திரு மண விழா, விழுப்புரத் தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு ஆண்டு சாதனை என்று கொண்டாடி வருகின் றனர். சட்டமன்றத்தி....... மேலும்
21 மே 2013 14:21:02

சென்னை, மே 22 - மத்தியில் 3 ஆண்டு காலம் ஆட்சி செய்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பற்றி யும்,தமிழ்நாட்டில் ஓராண்டு நிறைவுசெய்த அ.தி.மு.க. ஆட்சி குறித் தும் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
செய்தியாளர் :- மத்திய அரசு இன்றோடு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றுசொல்லப்படு கிறதே,அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?
கலைஞர் :- மத்திய அரசின் சார்பில் தமி ழகத் திலே நிறைவேற்றப் படும் 15 நிலைத்த திட் டங்களுக்காக 2005-க்கும் 2010-க்கும் இடைப் பட்ட ஐந்தாண்டுகளில் தமிழகத்திற்காக மத்திய அரசு 36,688 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி யிருக்கிறது.மேலும் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு களுக்காக 83,432 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், ஒதுக்க வும் உள்ளது என்ற நிலையில் மத்திய அரசி னால் தமிழக அரசு வஞ் சிக்கப்படுகிறது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
செய்தியாளர் :- குடியரசுத் தலைவர் வேட் பாளரைத் தேர்வு செய்வதற்காக 23 ஆம் தேதி டெல்லியில் நடை பெறும்அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு செல்கிறீர்களா?
கலைஞர் :- அதைப் பற்றி விவரம் தெரிய வில்லை.
செய்தியாளர் :- குடியரசுத் தலைவர் தேர் தலில் உங்கள் வேட்பா ளர் யார்?
கலைஞர் :- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் தி.மு.கழகம் இடம் பெற்றுள்ளது. எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட் பாளராக யார் நிறுத்தப் படுகிறாரோ, அவரை நாங்கள் ஆதரிப்போம்.
செய்தியாளர் :- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. உங்கள் ஆதர வைக் கேட்டால் கொடுப் பீர்களா?
கலைஞர் :- கேட் டால் பார்த்துக் கொள்ள லாம்.
செய்தியாளர் :- கர் நாடகத்தில் பெண்ணை யாற்றில் அணைக்கட் டுவது குறித்து காவேரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயல லிதா பிரதமருக்குக் கடி தம் எழுதியிருக் கிறாரே?
கலைஞர் :- காவேரி ஆணையம் அமைந்த போது, அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று இதே ஜெயலலி தாதான்கூறினார். காவேரி ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத் தையே இவர் தவிர்த்தார். ஆணையமே வேண் டாம் என்றார். இப் போது ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார். இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் முரணாகச் செயல்படு கிறார் என்றபோதிலும், காவேரி பிரச்சினையில் தமிழகத்தின்உரி மையைவிட்டுக் கொடுக்கநாங்கள் தயாராக இல்லை.
தமிழகத்தில் இப் போது நடைபெறுவது
``டம்பாச்சாரி ஆட்சி
செய்தியாளர் :- அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு நிறைவு என்ற பெயரால் பல கோடி ரூபாய் செலவில் விளம் பரங்கள் அரசு சார்பில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்களே?
கலைஞர் :- அந்தக் காலத்தில் ``டம்பாச்சாரி என்று ஒரு திரைப்படம் வந்தது. அதைப்போல இப்போது தமிழகத்தில் நடைபெறுவது ``டம் பாச் சாரி ஆட்சி.
-இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித் தார்.