Banner
முன்பு அடுத்து Page:

மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் நாட்டிலே அன்றைக்கு நெருக்கடி நிலைய…

மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் நாட்டிலே அன்றைக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள்

இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 23- 1975ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய  ‘Eelam....... மேலும்

23 மே 2013 16:24:04

யானைகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால் 4 ஏக்கர் வனம் நாசம்

யானைகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால்  4 ஏக்கர் வனம் நாசம்

கோவை, மே 23-கோவை மாங்கரை, சோமையம்பாளையம், சோமையனூர், காளையனூர், தடாகம் ரோடு பகுதியில் 22 யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூன்று குழுவாக திரியும் இந்த யானைகள், வீடுகளை இடித்து, கதவை உடைத்து அரிசி சாப்பிடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் ரோட்டில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கல் சூளை வளாகத்திற்குள் யானைகள் புகுவதால் செங்கல் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகம் ரோடு அனுவாவி....... மேலும்

23 மே 2013 15:00:03

தமிழ்நாடு பட்ஜெட் தொடர் பற்றி கலைஞர்

தமிழ்நாடு பட்ஜெட் தொடர் பற்றி கலைஞர்

கேள்வி: பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஏடு களில் வந்த செய்தியைப் படித்தீர்களா? கலைஞர்: படித்தேன்; குறிப்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையையே படித்தேன். தலைப்பே, வாழ்த்துரை களை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்று வெளியிட் டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த பகுதி வருமாறு:- நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர், ஆறு மாதங் களுக்கு சஸ்பென்ட் செய் யப்பட்டனர். தி.மு.க........ மேலும்

23 மே 2013 14:51:02

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின்  புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்

22 மே 2013 15:32:03

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்

22 மே 2013 15:28:03

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்

22 மே 2013 15:26:03

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்

22 மே 2013 15:22:03

மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?

மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே, இன்றைய இந்து நாளிதழில்  “Expressway : Contractor demands Rs. 103.95 Crores”   என்ற தலைப்பில்  புகைப்படத் துடன்  ஒரு  செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :- “Soma Constructions  Ltd.,  the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project,  has sought Rs.  103.95 crore from the National Highways Authority of India.  The latest....... மேலும்

21 மே 2013 15:42:03

பி.இ. சேர்க்கை: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம்

பி.இ. சேர்க்கை: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 21- பி.இ. சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (மே 20) ஆயிரக்கணக்கான மாண வர்கள் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். பி.இ. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர். எனவே, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்....... மேலும்

21 மே 2013 15:37:03

சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா

சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா

ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ....... மேலும்

21 மே 2013 15:12:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விளக்கம்

சென்னை, ஏப். 24- வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை வேளச்சேரியில் காவல் துறையினர் தங்களின் தற்காப்புக்காகவும், அப் பகுதி மக்களின் உயிரை பாதுகாக்கவுமே என்க வுன்டர் செய்தனர் என முதலமைச்சர் சட்ட மன்றத்தில் தெரிவித் துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று (24.4.2012) காவல் துறை மான்ய கோரிக்கை மீது நடைபெற்ற விவா தத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் பண்ருட்டி ச.ராமச்சந் திரன் அண்மையில் நடைபெற்ற என்க வுன்டர் குறித்து எழுப் பிய கேள்விக்கு குறுக் கீட்டு பதிலளிக்கையில், முதலமைச்சர் ஜெயல லிதா கூறியதாவது:

சென்னை பெருங்கு டியில் உள்ள பரோடா வங்கியில் 23.1.2012 அன்று ரூ.19 லட்சம், கீழ்க்கட்ட ளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 14 லட்சத்தை கொள்ளை யர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இக்கொள்ளையர்களை பிடிப்பதற்காக, எதிரி கள் துப்பாக்கியால் சுடு வதை தடுப்பதற்கும், உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் கொள் ளையர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் காவல்துறை யினர்அதிரடியாக நுழைய தீர்மானித்து அவ்வீட்டிற்குள் நுழைந்த பிறகும் எதிரிகள் துப் பாக்கியால் சுடுவதை நிறுத்தாததால் காவல் துறையினர் வேறு வழி யின்றி எதிரிகளை நோக்கி திருப்பிச்சுட்டனர். இத்தாக்குதலில் வீட்டில் இருந்த 5 நபர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. காயமுற்ற காவல் ஆய் வாளர்கள் மற்றும் 5 நபர்களும் உடனடியாக சென்னை அரசு இராயப் பேட்டை மருத்துவம னைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மனையில் காயமுற்ற 5 எதிரிகளையும் பரி சோதித்த மருத்துவர் அவர்கள் இறந்துவிட்ட தாகதெரிவித்தார். இறந்துபோன எதிரிகள் அனைவரும் பீகார், மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் வெடி பொருள்களைப் பயன்படுத்தி பல்வேறு கொலை மற்றும் கொள் ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந் துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, காவல் அலு வலர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசார ணையை மத்திய குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைக்க வேண்டு மெனகோரிக்கை விடுத்து ரிட் மனு ஒன்றை தாக்கல் செய் துள்ளார். அந்த ரிட் மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இம்மனுவின் விசா ரணை 5.6.2012 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள் ளது. ஆகவே வழக்கு நிலுவையில் உள்ளதால் இதற்கு மேல் இதுபற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள் கிறேன் என்று முதல மைச்சர் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.



தந்தையை கொன்ற 4 வயது மகன்

 

ரியாத், ஏப்.24- சவுதி அரேபியாவில் வீடியோ கேம் வாங்கித் தராத தந்தையை நான்கு வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தந்தையிடம் பல நாள்களாக வீடியோ கேம் வாங்கித் தருமாறு நச்சரித்து கொண்டி ருந்த அச்சிறுவன் அலுவலகம் சென்ற தந்தை வெறும் கையுடன் வந்ததை பார்த்து கோபமடைந்துள்ளான். தந்தை உடை மாற்றும் போது கீழே வைத்த அவரது துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுள்ளான். இதில் தலையில் குண்டு பாய்ந்ததை அடுத்து சிறுவனின் தந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்