
சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் -....... மேலும்
19 மே 2013 14:51:02

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார். விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்....... மேலும்
19 மே 2013 14:05:02

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 9 அணிகளில் உள்ள வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட் டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டுள்ளது....... மேலும்
19 மே 2013 13:51:01

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்
18 மே 2013 18:22:06

சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்
18 மே 2013 17:57:05

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்
17 மே 2013 17:22:05

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்
17 மே 2013 17:13:05

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்
17 மே 2013 16:17:04

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்
17 மே 2013 15:20:03

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்
16 மே 2013 16:56:04

மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை, ஏப்.24- சத்தீஷ்கார் மாநிலம் சுக்ரா மாவட்ட கலெக்டராக இருப்பவர் அலெக்ஸ் பால்மேனன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்று விட்டனர்.
கடத்தப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனனை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் உள்ள 8 பேரை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தை முகாம்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற 25 ஆம் தேதி வரை கெடு விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனனை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒடிசா மாநில எல்லையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் உள்ள பணிகளை பார்வையிட தனது அலுவலக சோதனைக்காக சென்றிருந்த சத்தீஷ்கார் மாநில சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டுகளால் கடந்த 21 ஆம் தேதி கடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
கடத்தப்பட்ட அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய பாதுகாப்பு குறித்து, அவருடைய குடும்பத்தினர் மிகவும் கவலையோடு இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியராக தனது அலுவலக பணிகளை ஆற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த அதிகாரி கடத்தப்பட்டது மிகவும் வாய்ப்புக் கேடானதாகும்.
கடத்தப்பட்ட அதிகாரியை விரைவில் பாதுகாப்புடன் விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் உள்துறை ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட உள்ளூர் மக்கள் அனைவரும் இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையோடு இருக்கிறார்கள்.
குறிப்பாக அந்த அதிகாரி உடல் நலம் இல்லாமல் இருப்பதால் கடத்தப்பட்ட அவர் விரைவில் விடுவிக்கப்பட்ட நல்ல செய்தியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அதிகாரியை விரைவில் பாதுகாப்போடு விடுவித்து அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு நிம்மதியை அளிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.