Banner
முன்பு அடுத்து Page:

92 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

92 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

சென்னை, மே 24-  கேன் குடிநீர் தயாரிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 309 நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில் கேன் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என்ற புகாரின் பேரில், அனைத்து கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி மூன்று மாவட்டங்களில் 92 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதை கண்டித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர்....... மேலும்

24 மே 2013 16:46:04

108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

108  அவசர ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

சென்னை, மே 24-  உயர் சிகிச்சை தேவைப் படும் நோயாளிகளை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப் பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மருத்துவர்களின் பரிந் துரையின் பேரில் கொண்டு செல்வது கடந்த ஆறு மாதத்தில் 4 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 108 அவசர ஆம்புலன்ஸ் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னையில் முதல் முதலாக 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் ஆரம்பிக்கப்பட் டது. தற்போது 630....... மேலும்

24 மே 2013 16:38:04

நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்தபோது என்னை உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் அவர்கள்

நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்தபோது என்னை உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் அவர்கள்

எல்.ஜி.நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 24- 1975ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெருக்கடி காலத்தில் என்னை மிசாவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, சிறையில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப் படுத்தியவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய  நுநடயஅ கூயஅடைள றடைட....... மேலும்

24 மே 2013 16:34:04

மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் நாட்டிலே அன்றைக்கு நெருக்கடி நிலைய…

மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் நாட்டிலே அன்றைக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள்

இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 23- 1975ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய  ‘Eelam....... மேலும்

23 மே 2013 16:24:04

யானைகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால் 4 ஏக்கர் வனம் நாசம்

யானைகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால்  4 ஏக்கர் வனம் நாசம்

கோவை, மே 23-கோவை மாங்கரை, சோமையம்பாளையம், சோமையனூர், காளையனூர், தடாகம் ரோடு பகுதியில் 22 யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூன்று குழுவாக திரியும் இந்த யானைகள், வீடுகளை இடித்து, கதவை உடைத்து அரிசி சாப்பிடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் ரோட்டில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கல் சூளை வளாகத்திற்குள் யானைகள் புகுவதால் செங்கல் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகம் ரோடு அனுவாவி....... மேலும்

23 மே 2013 15:00:03

தமிழ்நாடு பட்ஜெட் தொடர் பற்றி கலைஞர்

தமிழ்நாடு பட்ஜெட் தொடர் பற்றி கலைஞர்

கேள்வி: பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஏடு களில் வந்த செய்தியைப் படித்தீர்களா? கலைஞர்: படித்தேன்; குறிப்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையையே படித்தேன். தலைப்பே, வாழ்த்துரை களை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்று வெளியிட் டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த பகுதி வருமாறு:- நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர், ஆறு மாதங் களுக்கு சஸ்பென்ட் செய் யப்பட்டனர். தி.மு.க........ மேலும்

23 மே 2013 14:51:02

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின்  புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்

22 மே 2013 15:32:03

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்

22 மே 2013 15:28:03

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்

22 மே 2013 15:26:03

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்

22 மே 2013 15:22:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப்.22-சென்னை பெருநகர போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய 3 புதிய இணைப்பு சாலைகள், 2 சாலை மேம்பாலங்கள், 2 ஆற்று மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரி வித்தார்.

சட்டசபையில் 20.4.2012 நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை மானி யக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி பேசியதாவது: சாலைகளை அகலப்படுத்துதல்

பெருகி வரும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க இந்த ஆண்டு 350 கி.மீ. இடை வழித்தட மாநில நெடுஞ் சாலைகளையும், 1150 கி.மீ. ஒரு வழித்தட மாவட்ட முக்கிய சாலை களையும் அகலப்படுத் தும் பணி ரூ.740 கோடி யில் மேற்கொள்ளப்படும்.
ரூ.215 கோடியில் மாவட்ட முக்கிய சாலை கள் மற்றும் மாவட்ட இதர சாலைகளை வலுப்படுத்துதல், மேம்பாடு செய்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளும், ரூ.235 கோடியில் பாலப் பணி களும் நபார்டு வங்கியின் அங்கீகாரம் பெறப் பட்டவுடன் மேற்கொள் ளப்படும். நெடுஞ்சாலை களின் ஓரங்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்.

திருவள்ளூரில் பைபாஸ் ரோடு

கடலூர்  விருத்தா சலம் வழியாக சேலம் சென்றடையும் 111 கி.மீ. மாநில நெடுஞ்சா லையை தேசிய நெடுஞ் சாலையாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இந்த ஆண்டு முதல் இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக பராமரிக்கப்படும்.

கூட்டேரிப்பட்டு அருகே மைலம் புதுச் சேரி மாநில நெடுஞ் சாலை, வெள்ளிமேடு பேட்டைமைலம் சாலை சந்திப்பில் ரூ.25 கோடியில் பல்லடுக்கு பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக் கப்படும். திருவள்ளூர், திருத்தணி, மணச்சநல் லூர், மன்னார்குடி நக ரங்களுக்கு புறவழிச் சாலைக்கான நில எடுப்புப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

சென்னையின் தேவைக்காகசென்னை பெருநகர வளர்ச்சியின் போக்கு வரத்து தேவையினை பூர்த்திசெய்யும் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப் படும்.

* பல்லாவரம்  துரைப் பாக்கம் சாலையினை கிழக்கு கடற்கரை சாலை வரை நீட்டிப்பு செய்யும் வகையில் ஒரு புதிய இணைப்பு சாலை * மறைமலை அடிகள் பாலம்  இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் பகுதியினை ராஜீவ்காந்தி சாலையில் காரப்பாக்கம் பகுதியில் இணைக்கும் விதமாக சிறப்பு பொரு ளாதார மண்டலத்தின் பின்புறமாக புதிய இணைப்பு சாலை.

* அம்பத்தூர் பகுதி யில் சென்னை புறவழிச் சாலையினையும் சென்னை வெளிவட்டச் சாலையினை கருணாக ரச்சேரி அருகில் இணைக் கும் விதமாக புதிய 200 அடி அகல ஆரச்சாலை.

*கீழ்கட்டளை அருகே மவுண்ட் மேட வாக்கம் சாலை மற்றும் பல்லாவரம் துரைப் பாக்கம் சாலைகளின் சந்திப்பில் ஒரு மேம் பாலம் அமைக்கப்படும்.

* மேடவாக்கத்தில் மறைமலை அடிகள் பாலம்  இரும்புலியூர் சாலையுடன் மேட வாக்கம்  சோழிங்க நல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம்  மாம் பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட்  மேட வாக்கம் சாலை சந்திப் புகளை இணைக்கும் வகையில் ஒரு மேம் பாலம் அமைக்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்