Banner
முன்பு அடுத்து Page:

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்

17 மே 2013 17:22:05

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்

17 மே 2013 17:13:05

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்

17 மே 2013 16:17:04

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்

17 மே 2013 15:20:03

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்

16 மே 2013 16:56:04

தூத்துக்குடி அனல்மின் நிலையம் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையம் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி, மே 15- தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட் டுகள் உள்ளன. இதன் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்பட்டு வருகிறது. 5 யூனிட்டுகளும் நிறுவப் பட்டு நீண்ட காலம் ஆவதால், அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அனல்மின் நிலை யத்தில் உள்ள 3ஆவது யூனிட் பாய்லரில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மதியம்....... மேலும்

15 மே 2013 16:47:04

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள்: பணிகள் தொடங்கியது

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள்: பணிகள் தொடங்கியது

சென்னை, மே 15-சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் நகரும் சாய்வு தளங்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இந்தாண்டு இறுதியில் தனது முதல் ஓட்டத்தை தொடங்குகிறது. முதல்கட்டமாக மெட்ரோ ரயில் மேம்பாலம் வாயிலாக....... மேலும்

15 மே 2013 16:28:04

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர், மே 15-ஓசூர் கெலவரப் பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள் ளது. கருநாடகாவில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப் படி கெலவரப்பள்ளி அணையின் நீர் மட்டம் 42.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கன....... மேலும்

15 மே 2013 16:16:04

கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்புத் திட்டம் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்புத் திட்டம் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

சட்டமன்றத்தில் இன்று 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்புத் திட்டம் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு சென்னை, மே. 15 - வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய தமிழகத்தில் 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று (15.5.2013) சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்பு வருமாறு:- தமிழகத்தில் உள்ள வருவாய் வட்டங்களில் 4 லட்சத்திற்கும்....... மேலும்

15 மே 2013 16:02:04

மகாசேன் புயல் வலுவிழந்தது மழை வாய்ப்பு குறைந்தது

மகாசேன் புயல் வலுவிழந்தது மழை வாய்ப்பு குறைந்தது

சென்னை, மே 14- மகா சேன் புயல் வலுவிழந்து வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்வ தால் தமிழகத்தில் பலத்த மழைக்கான வாய்ப்பு குறைந்தது. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான மகா சேன் புயல் மெல்ல வட மேற்கு திசையில் நேற்று முன்தினம் இரவு 10 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது. நேற்று காலை அந்த புயல் சென் னைக்கு 690 கிமீ தூரத் தில் மய்யம் கொண்டு....... மேலும்

14 மே 2013 18:30:06

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி,ஏப்.21- பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்று மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் கூறினார்.

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தங்களது எதிர்கால தேவைக்கு தகுந்தாற்போல் சேர்ந்து படிக்கவேண்டிய கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்து அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்தரிய ராஜ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கவேண்டும், எந்த கல்லூரியில் படிக்கவேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ளவேண்டும். அந்த முடிவானது பெற்றோரின் கருத்துக்கு ஏற்பவும் இருக்கவேண்டும்.

அதேநேரத்தில் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை முடிவு எடுக்க சுதந்திரமாக விடவேண்டும். தங்களது எண்ணங்களை அவர்கள் மீது திணிக்கக்கூடாது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விண்ணப்பங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும்.

மாணவர்கள் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பாக அந்த கல்லூரிகளின் தரம், ஆசிரியர்களின் திறமை பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளியில் மனப்பாடம் செய்து பாடங்களை படிப்பதுபோல் கல்லூரிகளில் படிக்க முடியாது. எனவே மாணவர்கள் புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

புரியும் திறனை வளர்த்துக்கொள்ள முடியாத மாணவர்கள் தான் பருவத்தேர்வுகளில் தோல்வியை தழுவுகிறார்கள். தமிழகத்தில் தற்போது 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு பல கல்லூரிகளில் ஏ.அய்.சி.டி.இ கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே கலந்தாய்வு  மூலம் சுமார்ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்