
லக்னோ, மே 21- உத் தரப்பிரதேசத்தில் தலித் தலைவர்கள் நினைவி டங்கள் அமைத்ததில், முன்னாள் முதல்வர் மாயாவதியின் அமைச் சர்கள், அரசு அதிகாரி கள் உட்பட 199 பேர் 1,400 கோடி ஊழல் செய் தனர் என லோக்அயுக்தா தாக்கல் செய்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சி காலத் தில் லக்னோ மற்றும் நொய்டாவில் 14 இடங் களில் தலித் தலைவர் களின் நினைவிடங்கள்....... மேலும்
21 மே 2013 15:11:03

புதுடில்லி, மே 20- சீனப் பிரதமராக லீ கேகியாங் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார். அவர் தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். முதல் அரசு முறைப் பயணமாக அவர் நேற்று மாலை இந்தியா வந்தார். அவருடன் சீன அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வந்துள்ளனர். டில்லி விமான நிலையத்துக்கு சிறப்பு விமானத்தில் வந்த சீனப் பிரதமரை, வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அகமது மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். லீ கேகியாங் 27 ஆண்டுகளுக்கு....... மேலும்
20 மே 2013 16:11:04

புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்
15 மே 2013 15:49:03

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்
15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்
15 மே 2013 14:54:02

புதுடில்லி, மே 14- கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்
14 மே 2013 18:41:06

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்
14 மே 2013 18:28:06

புதுடில்லி, மே 14-இயற்கை சீற்றம் மற்றும் விபத்தால் பாதிக் கப்படும் மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கும் வகையில் பேரிடர் காப்பீடு மற்றும் கடன் வசதி திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ஆலோ சனை வழங்கியுள்ளார். பேரிடர் நிர்வாகம் பற்றிய கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசிய தாவது: நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களும், மனித தவறால்....... மேலும்
14 மே 2013 17:15:05

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70....... மேலும்
14 மே 2013 17:14:05

புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி....... மேலும்
14 மே 2013 16:30:04

புதுடில்லி, ஏப்.30- நாட்டில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, `தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம்' ஒன்றை அமைக்க சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த மய்யம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறி, இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் 10-க்கும் அதிகமான மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதமும் எழுதினார்.
மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மத்திய அரசு, இந்த பிரச்சினை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.
டில்லியில், உள்நாட்டு பாதுகாப்பு பற்றி விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 16 ஆம் தேதி முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால், இதுகுறித்து தனியாக முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதேபோல் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்தார்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைப்பது பற்றி விவாதிக்க மே 5 ஆம் தேதி தனியாக முதலமைச்சர்கள் மாநாடு கூட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, வருகிற மே 5 ஆம் தேதி (சனிக்கிழமை) டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
| < முன்பு | அடுத்து > |
|---|