
புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்
15 மே 2013 15:49:03

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்
15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்
15 மே 2013 14:54:02

புதுடில்லி, மே 14- கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்
14 மே 2013 18:41:06

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்
14 மே 2013 18:28:06

புதுடில்லி, மே 14-இயற்கை சீற்றம் மற்றும் விபத்தால் பாதிக் கப்படும் மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கும் வகையில் பேரிடர் காப்பீடு மற்றும் கடன் வசதி திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ஆலோ சனை வழங்கியுள்ளார். பேரிடர் நிர்வாகம் பற்றிய கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசிய தாவது: நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களும், மனித தவறால்....... மேலும்
14 மே 2013 17:15:05

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70....... மேலும்
14 மே 2013 17:14:05

புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி....... மேலும்
14 மே 2013 16:30:04

பெங்களூரு, மே 12- கருநாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்த ராமையா திங்கள்கிழமை (மே 13) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடு கள் பெங்களூரு கண்டீ ரவா விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகின்றன. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 121 இடங்களைக் கைப் பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸின் சட்டப் பேரவை கட்சித் தலைவராக சித்த ராமையா தேர்வு செய்யப்பட்டு, கருநாடக முதல்வராக அவர் திங்கள் கிழமை பதவியேற்க உள்ளார். பெங்களூரு கஸ்தூர்பா....... மேலும்
12 மே 2013 17:55:05

லக்னோ, மே 11- கல்வி மூலம் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இதில், மறைந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை, அவரது குடும்பத்தாரிடம் பிரணாப் முகர்ஜி வழங்கினார்........ மேலும்
11 மே 2013 15:14:03
தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கடத்தல்

ராய்பூர்,ஏப்.22- சத்தீஷ்கார் மாநிலத்தில் திடீர் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு தீவிரவா திகள், 2 பாதுகாவலர் களை சுட்டுக்கொன்று மாவட்ட ஆட்சியரை கடத்திச்சென்றனர். கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
வடமாநிலங்களில், மாவோயிஸ்டு தீவிரவாதி களின் அட்டூழியம் அதி கரித்து வருகிறது.
ஒடிசாவில், ஒரு மாதத்துக்கு முன்பு மாவோயிஸ்டு தீவிரவாதி களால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்னும் மீட்கப்படவில்லை.
இந்த நிலையில், பக்கத்து மாநிலமான சத்தீஷ்காரில் மாவட்ட ஆட்சியரின் இரு பாது காவலர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், ஆட்சியரை கடத்திச் சென்றுவிட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ள இந்த கடத்தல் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சத்தீஷ்கார் மாநிலத் தில் தண்டேவாடா மாவட்டம் மாவோ யிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி யாகும். சமீபத்தில் அந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சுக்மா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டது. இந்த மாவட் டத்தின் ஆட்சியராக 32 வயதான அலெக்ஸ் பால் மேனன் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பாளையங் கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் மாநி லத்திலேயே முதல்-மாணவராக தேர்ச்சி பெற்ற அலெக்ஸ் பால் மேனன், பின்னர் திண்டுக் கல்லில் உள்ள ஆர்.வி .எஸ். பொறியியல் கல் லூரியில் படித்து பட் டம் பெற்றார்.
அதன்பிறகு இந்திய வருவாய் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி யாற்றிய அலெக்ஸ் பால் மேனன் பின்னர் 2006ஆம் ஆண்டில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார்.
நேற்று மாலை, மஜிபரா என்ற குக்கி ராமத்தில் நடைபெற்ற பொது மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் ஆட்சியர் பால்மேனன் கலந்து கொண்டார். கிராம மக்களை தீவிர வாத பாதையில் இருந்து திருப்புவதற்காக, மாநில அரசு சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சிநடந்து கொண்டு இருந்த போதே பயங்கர ஆயுதங்க ளுடன் வந்த 20 மாவோயிஸ்டுகள் ஆட் சியர் பால் மேனனை கடத்த முயன்றனர். அவர் களை தடுக்க முயன்ற இரு பாதுகாவலர் களை யும் தீவிரவாதிகள் சர மாரியாக துப்பாக்கி யால் சுட்டுக் கொன் றனர்.பின்னர் ஆட்சியர் பால் மேனனை பணயக் கைதியாக அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தீவிர வாதிகள் கடத்திச் சென்றனர். இந்த நிகழ்ச் சியில் ஆட்சியருடன் உதவி ஆட்சியர் எஸ். கே.வைத் யாவும் கலந்து கொண்டார். ஆனால், தீவிரவாதிகள் அவரை விட்டுவிட்டனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சாண்டில்யா தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆட்சியரை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட் டனர்.ஆட்சியரை கடத்து வதற்கு முன்பாக, தீவிரவாதிகளும் சாதா ரண உடையில் பொது மக்கள் போல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோட்டம் விட்ட தாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. எனவே நன்கு திட்ட மிட்டு இந்த கடத்தலை அவர்கள் அரங்கேற்றி இருக்கி றார்கள்
ஒடிசாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. கோரபுட் மாவட்டத்தில் பணய கைதியாக வைக்கப்பட் டுள்ளார். அந்த இடத் தில் இருந்து ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரத்தில்தான் ஆட்சியர் கடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
ஆட்சியர் பால் மேனனுக்கு தீவிரவாதி களால் அச்சுறுத்தல் இருந்து வந்ததாக, உள வுப்பிரிவு காவல்துறை யினர் ஏற்கெனவே எச்ச ரிக்கை விடுத்து இருந் தனர். மாவட்ட ஆட்சி யர் கடத்தப்பட்டதும், மாநில முதல்-அமைச்சர் ராமன்சிங் உயர் அதி காரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி னார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் ராமன் சிங், ஆட்சியரை மீட்ப தற்காக அனைத்து நட வடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருவ தாக தெரிவித்தார்.
| < முன்பு | அடுத்து > |
|---|