Banner
முன்பு அடுத்து Page:

கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றம் அறிவுரை

கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்

15 மே 2013 15:49:03

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்

15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்

15 மே 2013 14:54:02

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்தலாம் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்தலாம் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

புதுடில்லி, மே 14-  கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்

14 மே 2013 18:41:06

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்

14 மே 2013 18:28:06

இயற்கை சீற்றம், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பேரிடர் காப்பீடு, கடன் வசதி

இயற்கை சீற்றம், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பேரிடர் காப்பீடு, கடன் வசதி

புதுடில்லி, மே 14-இயற்கை சீற்றம் மற்றும் விபத்தால் பாதிக் கப்படும் மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கும் வகையில் பேரிடர் காப்பீடு மற்றும் கடன் வசதி திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ஆலோ சனை வழங்கியுள்ளார். பேரிடர் நிர்வாகம் பற்றிய கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசிய தாவது: நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களும், மனித தவறால்....... மேலும்

14 மே 2013 17:15:05

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு மத்திய அமைச்சர் ரமேஷ் தகவல்

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு மத்திய அமைச்சர் ரமேஷ் தகவல்

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70....... மேலும்

14 மே 2013 17:14:05

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி....... மேலும்

14 மே 2013 16:30:04

கருநாடக மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் சித்தராமையா

கருநாடக மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் சித்தராமையா

பெங்களூரு, மே 12-  கருநாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்த ராமையா திங்கள்கிழமை (மே 13) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடு கள் பெங்களூரு கண்டீ ரவா விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகின்றன. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 121 இடங்களைக் கைப் பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸின் சட்டப் பேரவை கட்சித் தலைவராக சித்த ராமையா தேர்வு செய்யப்பட்டு, கருநாடக முதல்வராக அவர் திங்கள் கிழமை பதவியேற்க உள்ளார். பெங்களூரு கஸ்தூர்பா....... மேலும்

12 மே 2013 17:55:05

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும்: பிரணாப்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும்: பிரணாப் முகர்ஜி

லக்னோ, மே 11- கல்வி மூலம் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இதில், மறைந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை, அவரது குடும்பத்தாரிடம் பிரணாப் முகர்ஜி வழங்கினார்........ மேலும்

11 மே 2013 15:14:03

காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அமைச்சர் கண்டனம்

திருவனந்தபுரம்: நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அடர்த்தியான மாங்குரோவ் காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன. இந்தப் பிரதேசத்தை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது கிரிக்கெட் அமைப்பு.

இந்தியன் பிரிமீயர் லீக் (அய்பிஎல்) அணிகளில் கொச்சி அணியும் இடம்பெற்றுள்ளதால் அங்கு விளையாட்டை நடத்தும் பொருட்டு இந்த மைதானத்தை நிறுவ இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த மைதானத்துக்காக பல ஏக்கர் பரப்பில் அடந்து செழித்து வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படவுள்ளன. இதனால் திட்டத்துக்கு அந்த மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருமித்தமாக ஆதரவுதான் தெரிவித்துள்ளனர்.

மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும், ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று தென்மாநில வன அமைச்சர்களின் 4- ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின் விஷமத்தனமான திட்டங்கள்தான்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விரிவாக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் பற்றிய வனத்துறை அதிகாரிகளின் பார்வை நிச்சயம் மாற வேண்டும். காடுகளுக்கு பழங்குடி மக்களே முக்கிய அரண்களாக இருக்கும்படி வனத்துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அவர்கள் மீது வன பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சக் கூடாது.

'பசுமை இந்தியா இயக்கம்' திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும் அதன் பரப்பை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22- இல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.

நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது. கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். காடுகளை மக்களே உருவாக்கி பாதுகாக்க வேண்டும்.

இதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்