Banner
முன்பு அடுத்து Page:

கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றம் அறிவுரை

கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்

15 மே 2013 15:49:03

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்

15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்

15 மே 2013 14:54:02

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்தலாம் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்தலாம் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

புதுடில்லி, மே 14-  கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்

14 மே 2013 18:41:06

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்

14 மே 2013 18:28:06

இயற்கை சீற்றம், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பேரிடர் காப்பீடு, கடன் வசதி

இயற்கை சீற்றம், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பேரிடர் காப்பீடு, கடன் வசதி

புதுடில்லி, மே 14-இயற்கை சீற்றம் மற்றும் விபத்தால் பாதிக் கப்படும் மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கும் வகையில் பேரிடர் காப்பீடு மற்றும் கடன் வசதி திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ஆலோ சனை வழங்கியுள்ளார். பேரிடர் நிர்வாகம் பற்றிய கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசிய தாவது: நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களும், மனித தவறால்....... மேலும்

14 மே 2013 17:15:05

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு மத்திய அமைச்சர் ரமேஷ் தகவல்

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு மத்திய அமைச்சர் ரமேஷ் தகவல்

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70....... மேலும்

14 மே 2013 17:14:05

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி....... மேலும்

14 மே 2013 16:30:04

கருநாடக மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் சித்தராமையா

கருநாடக மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் சித்தராமையா

பெங்களூரு, மே 12-  கருநாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்த ராமையா திங்கள்கிழமை (மே 13) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடு கள் பெங்களூரு கண்டீ ரவா விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகின்றன. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 121 இடங்களைக் கைப் பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸின் சட்டப் பேரவை கட்சித் தலைவராக சித்த ராமையா தேர்வு செய்யப்பட்டு, கருநாடக முதல்வராக அவர் திங்கள் கிழமை பதவியேற்க உள்ளார். பெங்களூரு கஸ்தூர்பா....... மேலும்

12 மே 2013 17:55:05

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும்: பிரணாப்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும்: பிரணாப் முகர்ஜி

லக்னோ, மே 11- கல்வி மூலம் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இதில், மறைந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை, அவரது குடும்பத்தாரிடம் பிரணாப் முகர்ஜி வழங்கினார்........ மேலும்

11 மே 2013 15:14:03

எழுத்தாளர் பொன்னீலன் கருத்தும் - மகிழ்ச்சியும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் அவர்களுக்கு,

வணக்கம். விடுதலை பிப்ரவரி 28 இதழ் (அஞ்சலில் எனக்கு நேற்று தான் வந்தது) திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவில் தாங்களாற்றிய பேருரையை மனுதர்மத்துக்கும் மனித தர்மத்துக்குமிடையே மிகப் பெரும் போராட்டம் எனத் தலைப்பிட்டு அருமையாக வெளியிட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமநீதி இயக்கமென்பது அனைவருக்கும் அனைத்தும் என்னும் திசை வழியில் ஒரு நூற்றாண்டு காலம் ஓய்வில்லாமல், சோர்வில்லாமல் இயங்கி வரும் பேரியக்கம் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். வரலாறு தெரியாமல் வரலாற்றுச் சாதனைகளை வசப்படுத்திக் கொள்ளாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நாடகம் பார்க்கவும், ஏன் பேருந்தில் பயணம் செய்யவும், உணவு விடுதிகளில் நுழையவும் தலித்துகள் மறுக்கப்பட்ட காலம் அன்று இருந்தது. அந்தத் தடைகளை நீக்கி, அவர்களுக்கு விடுதலை வழங்கியது சமநீதிகட்சி. சமூகம் தெரிந்து, தெளிந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்து இது. உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் நாயரை வருணாசிரம நம்பூதிரி ஒருவர் எடாசங்கரா என அழைத்ததையும், கலைஞர் தலையீட்டால் இன்று தலித் நீதிபதிகளை வைதீக வெறிபிடித்த உயர் சாதியினர் எழுந்து நின்று ஓ மை லார்டு என்று பவ்வியமாக அழைக்கும் சூழ் நிலையையும் படிப்பவர் மனதில் பசு மரத்தாணிபோல் பதியும் வகையில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லயிருக்கிறீர்கள்.

தேவதாசி முறை பகவத்காரியம், இதை மாற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் முழங்கிய சத்தியமூர்த்தி அய்யரை அப்படி பகவத் காரியம் முடங்கிவிடக் கூடாது என்றால், இனி அதை உங்கள் பெண்களைக் கொண்டு தொடருங்கள் என்று அன்னை முத்துலெட்சுமி ரெட்டி சொன்ன பதிலின் பின்னால், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் இருந்தார் என மிக நேர்த்தி யாகச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

தங்கள் பேருரை அடித்தளத்தில் இன்னும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும். பெரியார் என்னும் பெரு மழையில் முளைத்துக் கிளைத்துச் செழித்துப் பூத்துக் காய்த்து நிற்கும் நம் மண்ணின் மக்களுக்குத் தங்கள் வாழ்வுக்கான ஆதார வேர்களை மனதில் பதியும்படி நினைவு படுத்த வேண்டும். மிக அரிய பேருரை இது. மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன்.

- பொன்னீலன்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்