
அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்
21 மே 2013 15:42:03

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்
21 மே 2013 15:37:03

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்
21 மே 2013 15:36:03

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார். பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு. அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர். பலர் அரசுப் பணிகளில்....... மேலும்
21 மே 2013 15:16:03

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக துளிர் அமைப்பி0ன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி கலந்துகொண்டு உரையாற்றினார் (திருச்சி, 19.5.2013). திருச்சி, மே.20- சென்னை துளிர் அமைப்பும், திருச்சி பெரியார் மெட்ரிக் பள் ளியும் இணைந்து குழந் தைகளுக்கான ஆங்கில எளிய முறை பயிற்சி வகுப்பு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத் தில் நேற்று (19.5.2013) மாலை நடந்தது. இப்பயிற்சி வகுப் பிற்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் நிரு வாகக் குழுத்....... மேலும்
20 மே 2013 15:40:03

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்! தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்
18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்
18 மே 2013 17:20:05

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்
17 மே 2013 16:57:04

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழாவட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு சென்னை, மே 15- வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று (12.5.13) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை வகித்து உரையாற்றினார். இவ்வாண்டு....... மேலும்
15 மே 2013 17:00:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் சிறப்பான பல்கலைக் கழகம் நீதியரசர் மோகன்மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பல்கலைக் கழகம் வேந்தர் கி.வீரமணி வல்லம், மே 13- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் சிறப்பான பல்கலைக்கழகம் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டான 25 ஆவது ஆண்டு வேந்தர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற....... மேலும்
13 மே 2013 17:27:05
சென்னை, ஜூலை 31- நன்னன் குடி நடத்தும் நன்னன் அண்ணல் நினை வுப்பரிசளிப்பு விழாவில் ஜாதி மறுப் புத் திருமணம் செய்து கொண்ட அய்ந்து இணையர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டது.
சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவை கட்டடத்தில் அமைந்துள்ள, திருவாவடுதுறை டி.என்.இராசரத் தினம் கலையரங்கத்தில் நன்னன் குடி சார்பில் நன்னன் அண்ணல் நினை வுப் பரிசளிப்பு விழா-9 நேற்று மாலை (30.7.2012) சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்குறள் மூலமும் உரையும் இவர்தாம் பெரியார்-3ஆம் பகுதியாக சுயமரியாதை என்ற தலைப் பிலும் ஏகம் பதிப்பகம் சார்பில் இரண்டு நூல்களும், வனிதா பதிப்பகம் சார்பில், தமிழியல் தொல் எழுத்துஞ் சொல் லும் தொடருடன் என்ற நூலும், தொல். பேராசிரியர் உரைத்திறன் என்ற நூலும், சும்மா இருக்க முடிய வில்லை என்ற நூலுடன் மொத்தம் அய்ந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
அய்ந்து நூல்களையும் முனைவர் மருதநாயகம் வெளியிட, கல்வியாளர் லியோமுத்து பெற்றுக் கொண்டார். முன்னதாக பேராசிரியரும், பெரியார் பேருரையாளரும், புலவருமான மா.நன்னன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பேராசிரியர் மா.நன்னன் அவர் களுக்கு 90ஆம் அகவை தொடங்கிய தையொட்டி அவருக்கு சிறப்பு செய் யப்பட்டது. தமிழர் தலைவரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள் சார்பாக, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மா.நன்னன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
தொடர்ந்து தமிழைத் தமிழாக் குவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தேர்வுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புச் செய்யப்பட்டது. பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட, திராவிடர் கழகத் தோழர்களான பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்த உடுமலை வடிவேல்- கி.மணிமேகலை, சென்னை வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்- கலைச் செல்வி, சென்னை திருவொற்றியூர்ப் பகுதியைச் சேர்ந்த இளங்கோ-இந் திரா, மயிலாடுதுறையைச் சேர்ந்த அறி வுடைநம்பி - துர்கா, திருச்சியைச் சேர்ந்த அஞ்சுகம்- சந்துரு ஆகிய அய்ந்து இணையர்களுக்கு தலா ரூபாய் 10,000 வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் அடுத்த பகுதியாக புலவர் பா.வீரமணி, கவிஞர் ஆண் டாள் பிரியதர்ஷினி, கவிக்கோ ஞானச் செல்வன், முன்னாள் தலைமை ஆசிரி யரும், எழுத்தாளருமான மஞ்சை வசந் தன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, முனைவர் மருதநாயகம் ஆகி யோர் நூல்களை திறனாய்வு செய்து உரையாற்றினர்.
இறுதியாக அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கவிக்கொண்டல் மா.செங் குட்டுவன், சென்னை மேனாள் மேயர் சா.கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
